Sunday, October 11, 2009

கணிணிக்கு தேவையான அடிப்படையான அனைத்து மென்பொருட்களும் ஒரே இடத்தில் -All software in one place.

கணிணிக்கு தேவையான அடிப்படையான அனைத்து மென்பொருட்களும் ஒரே இடத்தில்


நம் கணிணியில் அடிப்படையான சில மென்பொருட்களை தரவிறக்க ஒவ்வொரு முறையும் தரவிறக்க ஒவ்வொரு தளங்களில் சென்று தரவிறக்க வேண்டியிருக்கும் அது போல் இல்லாமல் ஒரு மென்பொருள் வழியாக நமக்கு தேவையான அனைத்து மென்பொருட்களும் நிறுவ இந்த மென்பொருள் உதவும்

https://getvolery.com/accounts/demo/howtogeek <---- Click here


Thursday, October 8, 2009

தமிழில் ஜாதகம் பார்க்கும் மென்பொருள் - Tamil astrology software in Tamil

தமிழில் ஜாதகம் பார்க்கும் மென்பொருள்



Tamil astrology software.rar <--- Click here


Its very nice and interesting software,I think u ll get all the data form this software... Take it and Enjoy.

Wednesday, October 7, 2009

chatting without messenger

chatting without messenger



If you want personal chat with a friend
you don't need to download any yahoo messenger
All you need is your friends IP address and Command Prompt.
Firstly, open Notepad and enter:
@echo off
:A
Cls
echo MESSENGER
set /p n=User:
set /p m=Message:
net send %n% %m%
Pause
Goto A
Now save this as "Messenger.bat". Open the .bat file and in Command
Prompt you should see:
MESSENGER
User:
After "User" type the IP address of the computer you want to contact.
After this, you should see this:
Message:
Now type in the message you wish to send.Before you press "Enter" it should look like this:
MESSENGER
User:27.196.391.193
Message: Hi
Now all you need to do is press "Enter", and start chatting!

Monday, October 5, 2009

Scholarship for school students - INFO

Scholarship for school students - INFO

If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th standard this year (April 2009) and scored more than 80%, please ask them to contact the NGO-Prerana (supported by Infosys foundation). The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies.

Please ask the students to contact the people mentioned below to get the form

#580,Shubhakar,
44th cross,1st ‘A’ main road,jayanagar 7th block Bangalore
Mob no- 9900906338(saraswat i)

Mr.Shivkumar( 9986630301) - Hanumanthnagar
office

Ms.Bindu(9964534667 )-Yeshwantpur office

Even if you don’t know anyone, please pass on this info, someone might be in need of this help desperately.

Sunday, October 4, 2009

உங்களுடைய boot -up screen மாற்ற வேண்டுமா ? Do u want Change your boot-up screen

உங்களுடைய boot -up screen மாற்ற வேண்டுமா ?

Do u want Change your boot-up screen

http://www.brothersoft.com/bootskin-25715.html இந்த வலைத்தளத்தில் சென்று இலவசமாக பெற்று கொள்ளலாம்
இதை download செய்து install செய்யவும்.

Software install செய்து முடித்து விட்டோம் இப்பொழுது skin எவ்வாறு மாற்றுவது என்று பார்போம்

Replace your windows start-up screen with new pulsar


http://www.blogcatalog.com/search.frame.php?term=windows+boot-up+screen+replace+by+pulsar+220+graphic&id=0a0a11d7680468d6920d32841c55d679

U can get the boot skin and follow the rules .If u have any doubt u can contact me.

































Wednesday, September 30, 2009

Pocket Oxford English Dictionary 3.10

Pocket Oxford English Dictionary

http://download.cnet.com/Pocket-Oxford-English-Dictionary/3000-2279_4-139695.html


This is an electronic reissue of the ninth edition of the world's longest-established pocket English dictionary by Oxford University Press. It is one of the new generation Oxford dictionaries derived from the database of the highly acclaimed New Oxford Dictionary of English and is particularly user friendly with its elegant open design, with different elements starting on new lines.

பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம்? எளிய வழி - Easy way to Format your USB

பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம்? எளிய வழி


பார்மெட் செய்ய முடியாத USB ட்ரைவ்களை இந்த முறையில் பார்மெட் செய்து பாருங்கள்.

1 )முதலில் ஸ்டார்ட் மெனு Start Menu கிளிக் செய்யுங்கள்.

2) ரன் Run தேர்வு செய்யுங்கள்.
3) அந்த பெட்டியில் CMD என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள்.

4)பிறகு Format/x J: என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள். இதில் J: என்பது உங்கள் யுஎஸ்பி ட்ரைவின் எழுத்தாகும்.

Tuesday, September 29, 2009

Hidden comands in XP.....Very Interesting...

Hidden comands in XP.....
1- Private Character Editor
This program is for designing icons and Characters(Alphapet )
Click :start
Then :run
type :EUDCEDIT
............ ......... ......... ......... ......... ..

2- iExpress
This Program is for conerting your files to EXCUTABLE files
Click : start
Then : run
type : iexpress
............ ......... ......... ......... ......... ..

3-Disk Cleanup
This program used for cleaning harddisk to offer space
Click : start
Then : run
type : cleanmgr

............ ......... ......... ......... ......... ..

4-Dr Watson
This program Is for repairing problems in Windows
Click : start
Then : run
type : drwtsn32
............ ......... ......... ......... ......

5-Windows Media Player 5.1
Opens the old media player
Click : start
Then : run
type : mplay32
............ ......... ......... ......... ......

Program ............ . CODE
__________ __________

Character Map = charmap

DirectX diagnosis = dxdiag

Object Packager = packager

System Monitor = perfmon

Program Manager = progman

Remote Access phone book = rasphone

Registry Editor = regedt32

File siganture verification tool = sigverif

Volume Contro = sndvol32

System Configuration Editor = sysedit

Syskey = syskey

Microsoft Telnet Client = telnet

Adobe photo shop CS4 Portable Download

Take greater advantage of all that Adobe Photoshop CS4 offers with a more intuitive user interface and features that put you in control.
Revolutionary image editing Adjustments panel
Simplify image adjustment by easily accessing every tool you need to nondestructively adjust and enhance the color and tone of your images; on-image controls and a wide variety of presets are also included in the new live and dynamic Adjustments panel.

DOWNLOAD :

http://uploading.com/files/NH6FOV5Q/CS4.rar.html

Portable Software means
* No need to install this soft in ur pc
* No Serial Nu required
* No acivation
* Just Double Click & Start the Application

Monday, September 28, 2009

மீனம்- Meenam -Sanipeyarchi palangal 2009

மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசி அன்பர்களே!
மீன ராசியில் பிறந்த நீங்கள் திடமான நம்பிக்கையுடனும் நன்னெறியுடனும் தன்னடக்கத்துடனும் சிறந்து விளங்குவீர்கள். பொறுப்புகள் வரும்போது சாமர்த்தியமாக நழுவிக் கொள்வீர்கள். பிறரை நன்கு புரிந்து கொள்வீர்கள். மற்றவர் ஏதேனும் தீங்கு செய்தால் அவர்களிடம் கூறாமல் பிறரிடம் சொல்லி கேலியும் கிண்டலும் செய்வீர்கள். சிரித்துப் பேசி மற்றவர்களை உங்கள் வசமாக்கிக் கொள்வீர்கள். நயமாகவும் அபிநயத்துடன் முகத்தில் பாவனை காட்டியும் பேசுவீர்கள். குடும்பத்தில் பெரும்பாலும் கடைக்குட்டியாக இருப்பீர்கள். அல்லது மற்றவருக்கு செல்லப் பிள்ளையாக இருப்பீர்கள். சகோதரிகள் மேல் பாசம் கொண்டிருந்தாலும் விலகியே வாழ்வீர்கள். தயா‘ரின் அன்பும் அரவணைப்பும் பெரிய வயதுவரை உங்களுக்குப் பக்க பலமாக இருக்கும். எவ்வகையிலும் வசதி குறையாமல் சுக ஜீவனம் செய்வீர்கள்.

கல்வியில் உயர்படிப்பு பயிலும் வேளையில் தடை ஏற்பட்டு பின்னர் தொடர்ந்து பயிலுவீர்கள். நீங்கள் பிறந்தது ஓரிடம், வளர்ந்தது ஓரிடம், கல்வி பயின்றது வேறிடம் என இடம் மாறி மாறி வாழ்வீர்கள். கலைப்பயிற்சி, விஞ்ஞான ஆராய்ச்சி ஆகியவற்றைக் கற்றுத் தேர்ச்சி பெறுவீர்கள். அறிவு நூல்கள் பலவற்றையும் படித்து அறிவை விருத்தி செய்து கொள்வீர்கள். பெரும்பாலும் உங்களுக்குப் பெண் குழந்தைகளே அதிகம் பிறக்கும். இளையதாரத்துக்கு ஆண் வாரிசு உண்டாகும். உங்களை எதிர்ப்பவர்களின் தடைகள்தான் உங்கள் முன்னேற்றத்தின் படிக்கட்டுகள் ஆகும். சாதாரணமாகக் கடன் தொல்லை இருக்காது. ஆனால் கடன் இருக்கும். சுயதொழில் நிறுவனம் ஆகியவற்றை விரிவுபடுத்தவும், வெளியூர் பயணங்களை மேற்கொள்வதாலும், பெண்மக்கள் திருமணத்திற்காகவும் கடன் வாங்க நேரிடும். ஆனால் ஒரு கடனைக் கட்டினால் மறுகடன் வாங்குவீர்கள். நண்பருக்காக எதையும் செய்யும் குணம் கொண்டிருப்பீர்கள். அதனால் மற்றவரின் பகையையும் பெறுவீர்கள். பாராட்டு பெற மாட்டீர்கள். இருப்பினும் தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும் என்று கூறுவீர்கள். நன்றாக நயந்து பேசும் நண்பர்களையெல்லாம் நல்லவர் என நம்பி மோசம் போவீர்கள்.

புது சிந்தனைகளையும் மாறுபட்ட புதுமையான கருத்தையும் சிறந்த தத்துவங்களையும் கூறுவீர்கள். இயற்கையாகவே இளம்வயது முதலே கூர்மையான அறிவினைப் பெற்றிருப்பீர்கள். ஆனால் உங்களுடைய கூச்ச சுபாவத்தால் திறமையை வெளிப்படுத்தத் தயங்குவீர்கள். பிற்காலத்தில் மற்றவர் ஆச்சரியப்படும்படியான செயல்களைச் செய்து காட்டுவீர்கள். பாதி வயதிற்கு மேல்தான் உங்கள் திறமை வெளிப்படும். இளமைக் காலத்திலேயே, வசதியான குடும்பத்தில் பிறந்த- படித்த- அழகான பெண் மனைவியாக வருவாள்.

இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாமிடத்தில் இருந்த சனி பகவான் பல நற்பலன்களைக் கொடுத்தார். குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும் அவை யாவும் படிப்படியாகத் தீர்ந்தது. உங்களிடம் இருந்த வம்பு, வழக்குகள் யாவும் நிவர்த்தி அடைந்தது. உங்களது அவசர பேச்சால் சில பிரச்சினைகளையும் சந்தித்தீர்கள். சிலருக்கு உடல் நலமும் பாதித்தது. செய் தொழிலில் ஓரளவு நற்பலன்களே இருந்தது. எதிர்பார்த்த லாபம் இல்லையென்றாலும் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டீர்கள். சிலருக்குப் புதிய வீடு கட்டவோ அல்லது வாங்கவோ அதற்கான அமைப்பு உண்டானது.

இனி சனி பகவான் உங்களது ராசிக்கு ஏழாமிடமான களஸ்திர ஸ்தானத்தில் கண்டச்சனியாக வருகிறார். குடும்பத்தில் சில பிரச்சினைகளும் சிரமங்களும் உண்டாகும். உங்களது பேச்சாலேயே பிரச்சினைகள் உருவாகும். ஆதலால் எங்கு பேசினாலும் நிதானமாகவும் யோசித்தும் பேசுங்கள். விலகியிருந்த நண்பர்கள் இனி நெருங்கி வருவார்கள். கணவன் - மனைவியிடையே இருந்துவந்த பிரச்சினைகள் யாவும் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். அன்பு பெருகும். பணப்பற்றாக்குறை வந்தாலும் கடைசியில் தேவையான நேரத்தில் எங்கிருந்தாவது பணம் வந்து சேரும். நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுத்தால் அந்தப் பணம் சிக்கிரம் வந்து சேராது. ஆதலால் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அதேபோல் மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடுவதோ, பொறுப்பு எடுத்துக் கொள்வதோ கூடாது. அப்படிச் செய்தால் பிரச்சினைகள் யாவும் உங்களையே வந்துசேரும்.

நீங்கள் செய்யாத தவறுக்குக் தண்டனை அனுபவிக்கும் சூழ்நிலை உண்டாகும். அல்லது விமர்சனத்திற்கு ஆளாகலாம். எப்படி இருந்தாலும் உங்களது கௌரவம் மட்டும் பாதிக்காது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அவ்வப்போது சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சரியாகும். வம்பு, வழக்கு வந்து பின் குற்றமற்றவர் என நிரூபணமாகும். உங்களது உடல் நிலையிலும் கவனம் தேவை. மனதில் இனம்புரியாத பயம் இருந்தாலும் பிற்பகுதியில் தெளிவு பிறக்கும். நீங்கள் முயற்சி செய்யும் காரியங்களில் சில தடை, தாமதம் உண்டாகி பின் காரியம் கைகூடும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் ஏற்படும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். அதைக் காப்பாற்றத் திணறுவீர்கள்.

வேலையில் நற்பெயரும் கௌரவமும் அதிகமாகும். உங்களது தன்னம்பிக்கையால் அனைவரிடமும் நற்பெயர் வாங்குவீர்கள். வீட்டு கட்டுமானப் பணி நடந்து கொண்டிருப்பவர்களுக்கு அதிக செலவுகளும் வீண் விரயங்களும் உண்டாகும். சிலருக்கு வீட்டில் சில மாறுதல்கள் செய்யும் சூழ்நிலையும் உண்டாகும். இளைய சகோதரர்களால் நன்மையும் உதவியும் எதிர்பார்க்க முடியாது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால்தான் சிற்சில உதவிகள் இருக்கும். நண்பர்களுக்கு உதவி செய்யும் நிலையில்தான் நீங்கள் இருப்பீர்கள். அவர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். கூட்டுத் தொழிலில் தொய்வு நிலையும் உண்டாகும். இருப்பினும் ஓரளவு பணவரவு இருக்கும். தாய்வழி உறவு முறைகளால் சிறிது நன்மையை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வோ இடமாற்றமோ கிடைப்பது கடினம். வேலை இல்லாதவர்களுக்குக்கூட மிகுந்த சிரமத்திற்குப் பிறகு ஓரளவு பணம் கிடைக்கும்.

பண விஷயத்தில் யாரையும் நம்பி இருக்க வேண்டாம். எந்த முடிவாக இருந்தாலும் தாங்களே முடிவெடுத்துச் செயல்படுவது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். மிகவும் சோர்வாகவும் மந்தமாகவும் இருக்கும். எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அதில் தடையும் தாமதமும் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். இருப்பினும் அதிலும் சில சிக்கல்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டு, பிறகு இனிதே திருமணம் நடைபெறும். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் உங்களுக்கு அவர்கள் மறைமுகமாகப் பிரச்சினைகள் உண்டாக்குவார்கள்.

தந்தைக்குப் பல வழிகளில் பணம் வரும். இருப்பினும் உடல் நிலையில் சிறிது பாதிப்புகளைக் கொடுக்கும். வீடு, வண்டி, வாகனம் ஆகியவற்றில் பழுதுபார்ப்பு செலவுகள் உண்டாகும். ஆலயங்களுக்குச் சென்று வரும் வாய்ப்புண்டு. உறவினர்களால் தொல்லையும் பகையும் உண்டாகும்; உங்களுக்கெதிராகச் செயல்படுவார்கள். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் உங்கள் வழியில் நீங்கள் செல்லுங்கள்.

சிலருக்கு நிலையான தொழிலும் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும் வரும். மாணவர்கள் சுமாரான பலனை அடைவார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் அதை சேமிக்க முடியாது. கடனை அடைப்பதற்கே சரியாக இருக்கும். மூத்த சகோதரர்களுக்குப் பதவியில் இடமாற்றமும், அதிக அலைச்சலும் ஏற்படும். சிலருக்கு உயர் பதவியுடன் கூடிய இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. அலைச்சலினால் உடல்நிலை பாதிக்கும்.

சனி பகவான் 3-ஆம் பார்வையாக உங்களது ராசிக்கு ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு தோன்றும். தந்தைக்கு எடுத்த காரியம் முடிவடையாமல் இழுபறி நிலையாகவே இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் ஒரு பிடிப்போ பற்றோ இல்லாமல் செயல்படுவார். பிதுரார்ஜித சொத்து வகையில் வில்லங்கமும் பிரச்சினைகளும் தோன்றும்.

குழந்தைப் பிறப்பில் தடைகளும் தாமதங்களும் உண்டாகும். புனித ஸ்தலங்களுக்குச் செல்ல முயற்சிப்போருக்கு காலதாமதம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு மிகமிக அவசியம். குலதெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வந்தால் அனைத்து காரியங்களும் வெற்றியடையும்.

சனி பகவான் 7-ஆம் பார்வையாக ஜென்ம ராசியைப் பார்ப்பதால் உங்களுக்கு உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முன்பு பயந்து- நம்பிக்கையிழந்து இருந்த சூழ்நிலை மாறி, தற்போது அதிக நம்பிக்கையுடனும் அதிக வீரியத்துடனும் எச்செயலிலும் தைரியமாக ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மன பயம் விலகும். எங்கு சென்றாலும் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். பல கௌரவமான பொறுப்புகள் உங்களைத் தேடிவரும். அனைவராலும் மதிக்கப்படுவீர்கள்.

சனி பகவான் 10-ஆம் பார்வையாக உங்களது ராசிக்கு நான்காமிடமான சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால், தாயாருக்கு அடிக்கடி உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாக வாய்ப்புண்டு. சிலர் கடன் வாங்கி, பழைய வாகனத்தை அதிக விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலை உண்டாகும்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2009 - செப்டம்பர் முதல் பத்து மாத காலம் மீன ராசிக்கு 6-க்குடைய சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிப்பதால் கவனமாகச் செயல்பட வேண்டும். மறைமுக எதிர்ப்புகளும் தவிர்க்க முடியாத கடன்களும் டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியாத நோய்களும் உருவாகும். ''நோய்க்கும் பார் பேய்க்கும் பார்'' என்பது போல சிகிச்சையும் தேவை; தெய்வ வழிபாடும் தேவை.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2010 - ஜூலை முதல் 14 மாத காலம் மீன ராசிக்கு 5-க்குடைய சந்திரனின் சாரத்தில் சனி சஞ்சரிப்பதால் உங்கள் மனம்போல் வாழ்வு அமையும். மனதில் வகுத்த நற்திட்டங்கள் நிறைவேறும். மனைவி, மக்களால் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படும். சொந்த பந்தங்களிடையே பகை உணர்வு நீங்கி பாச உணர்வு மேலிடும். பொருளாதாரத்தில் திருப்தியான நிலை ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2011 - செப்டம்பர் முதல் ஆறு மாதம் மீன ராசிக்கு 2, 9-க்குடைய செவ்வாயின் சாரத்தில் சனி சஞ்சரிப்பார். இக்காலம் பொற்காலம்; நற்காலம். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஏராளமான தனவரவு, தாராளமான சுபச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்குத் திருமணம், வாரிசு யோகம், பதவி யோகம் ஆகிய நற்பலன்கள் யாவும் உண்டாகும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி பெண்கள் வகையில் ஏற்பட்ட சஞ்சலங்களையும் சங்கடங்களையும் விலக்கி நன்மையும் நன்மதிப்பும் உண்டாக்கும். தொழில் உயர்வு, தனவரவு, லாபம், சேமிப்பு, கடன் நிவர்த்தி, காரிய வெற்றி போன்றவை ஏற்படும். தேக சௌக்கியம் தெளிவாக இருக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி உடல் நலத்திலும் மன நலத்திலும் வேதனைகளை விலக்கி நன்மைகளையும் ஆதாய அனுகூலங்களையும் உருவாக்கும். பணவரவு, தொழில் லாபம், கடன் நிவர்த்தி, வழக்குகளில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, பிள்ளைகள் வகையில் நல்லவை போன்ற நற்பலன்கள் நடக்கும் பேரும் புகழும் பெருமையும் உண்டாகும்.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி இதுவரை பட்ட கஷ்ட, நஷ்டங்களுக்குப் பரிகாரம் செய்வது போல் லாபமும் முன்னேற்றமும் வெற்றியும் தரப்போகிறது. தொழில்துறையில் வேகத்தையும் யோகத்தையும் தந்து சோகத்தைப் போக்குவது உறுதி.

பரிகாரம்
திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சனீஸ்வரர் தனியாக இருக்கிறார். அவருக்கு நல்லெண்ணெய் திரிவிளக்குப் போட்டு வழிபடவும்.

கும்பம்- Kumbam- Sanipeyarchi palangal 2009

கும்பம்
அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
கும்ப ராசி அன்பர்களே!
கும்ப ராசியில் பிறந்த நீங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வீர்கள். பொறுமைசாலி. சதா ஏதாவது சிந்தனையுடன் இருப்பீர்கள். பிறரை எளிதில் எடைபோடுவீர்கள். சொந்த காரியங்களுக்குச் செலவு செய்யும் நேரத்தைவிட பிறர் காரியங்களுக்குத்தான் அதிக நேரத்தைப் பயன்படுத்துவீர்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யும் உண்மையான அன்பு கொண்டிருப்பீர்கள். உள்ளத்தில் தோன்றியதை ஒளிவு மறைவு இல்லாமல் வெளியீடுவீர்கள். நயந்து குழைந்து மெல்லிய குரலில் பேசத் தெரியாது.

எதற்கும் விட்டுக் கொடுக்காத நீங்கள் மனைவி வந்தபின் வீண் பிடிவாதத்தைக் குறைக்கும் மனப்பக்குவத்தை அடைவீர்கள். மிடுக்கான தோற்றம், பெருந்தன்மை, உண்மை, நேர்மை ஆகியவற்றைக் கொண்டிருப்பீர்கள். தேவை வரும்போது எவ்வளவு பெரிய தொகையானாலும் ஏதேனும் ஒரு வழியில் சமாளித்து விடுவீர்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும் அவசரத்திற்கு அடுத்தவர் உதவியை நாடுவீர்கள்.

உடன் பிறந்தோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும். சகோதர ஆதரவு பெறமுடியாது. உங்களுடைய உழைப்பும் முயற்சியும் அடுத்தவர்களுக்கே பயன்படும். உங்களுக்குப் பயன் இல்லை. தாயாரின் அன்பும் பாசமும் உண்டு. ஆனால் அவருக்கு அடிக்கடி நிரந்தர பிணியும் ஏற்படும். உங்களை உங்கள் தகப்பனாரும் மனைவியும் புரிந்த அளவு, சகோதர- சகோதரிகளும் தாயாரும் புரிந்து கொள்வது கடினம்.

பழைய வீடுகளையும் வாகனங்களையும் புதுப்பித்து வாழ்வீர்கள். இளமைக் காலத்தில் வறுமையும் கஷ்டமும் அனுபவித்தாலும், பிறகு உங்கள் சுய முயற்சியால் நடுத்தர வயதிற்குமேல் சுய வீடு, வாகனம், ஆடம்பர வசதியும் பெற்று மேன்மையுடன் வாழ்வீர்கள். அப்பொழுதுகூட பழையதை நினைத்துப் பார்ப்பீர்கள். பிறக்கும்போது குடிசையில் பிறந்தாலும் கோபுரமாக உயர வாய்ப்பு பெற்றவர். உங்களுக்குக் கிடைத்த அனுபவத்தை மற்றவர்க்கு எடுத்துரைப்பீர்கள். நீங்கள் யாரையும் அவ்வளவு எளிதில் நம்பமாட்டீர்கள். பலமுறை யோசித்துப் பார்த்து உங்களுக்கு அனுசரணையாகவோ அல்லது பிடித்தது போல் நடந்து கொண்டால் மட்டுமே நம்புவீர்கள். உங்கள் செயல்திறனால் பின்வரும் சந்ததியினரும் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

இசையிலும் சங்கீதத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். அரசியலில் நுழைந்தால் விடாமுயற்சி கொண்டு பெரும் பதவியை அடைவீர்கள். தொழில் துறையில் ஈடுபட்டாலும் பெரும் தொழிலதிபர் ஆவீர்கள். பொதுவாக நீங்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறீர்களோ, எந்த லட்சியத்தை அடைய நினைத்து விடாமுயற்சியுடன் ஈடுபடுகிறீர்களோ, அதை நிச்சயம் அடைவீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எப்பொழுதும் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் கண்டச்சனியாக இருந்த சனி பகவான் உங்களுக்கு அலைச்சலையும் மனதில் நிம்மதி இல்லாத நிலையையும் தந்தார். எந்தக் காரியத்தையும் முழுமையாகச் செய்ய முடியாமல் பாதியிலேயே விடும் நிலை உண்டானது. குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளும் பிரச்சினைகளும் ஏற்பட்டது. பணப்பற்றாக்குறை உண்டானது. பேச்சால் பிரச்சினை உண்டானது. வம்பு வழக்குகளைச் சந்திக்கும் நிலை உண்டானது.

இனி உங்களது ராசிக்கு எட்டாமிடத்திற்குப் பெயர்ச்சியாகி அஷ்டமச் சனியாக செயல்படுவார். இதனால் உடல்நிலை அடிக்கடி பாதிக்கும். மனதில் குழப்பங்களும் கவலைகளும் குடிகொள்ளும். குடும்பத்தில் பிரச்சினை தோன்றி மறையும். மனதில் பயம் இருந்துகொண்டே இருக்கும். இளைய சகோதரர்களால் பிரச்சினையும் கஷ்டங்களும் உண்டாகும். பதவியில் எதிர்பாராத திருப்பங்களும் சிக்கல்களும் உண்டாகும். மனதில் பல திட்டங்களை வகுத்திருப்பீர்கள். எவற்றையுமே செயல்படுத்த முடியாமல் போகும்.

இளைய சகோதரர்களின் உதவியை எதிர்பார்க்காமல் நீங்களே எந்த ஒரு காரியத்தையும் செய்யும் சூழ்நிலை உண்டாகும். மனதில் தேவையற்ற விபரீத கற்பனைகள் உண்டாகும். நண்பர்களில் ஒரு சிலரே உங்களிடம் உண்மையான அன்புடன் இருப்பார்கள். அவர்களில் ஒருவரே உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து உங்களுடன் அனுசரணையாக இருப்பார். மற்ற சில நண்பர்கள் உங்களுக்கு எதிரியாகும் சூழ்நிலையும் உண்டாகும். கௌரவ பாதிப்புகளும் இழப்புகளும் உண்டாக வாய்ப்புண்டு. செய்தொழிலில் சில கௌரவ குறைவுகள் ஏற்பட்டாலும் பிறகு சரியாகிவிடும். தொழிலில் அன்னியர்களின் தலையீடு உண்டாகும். அவற்றை தடுக்க வேண்டும்.

மாணவர்கள் கல்வியில் ஆர்வமில்லாமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நேரத்தை வீணடிப்பார்கள். இதனால் வெளியிடங்களில் மதிப்பு குறைந்து காணப்படும். நீங்கள் யாருக்கும் வாக்குறுதி அளிப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. உறவினர்களாலும் தாய்வழி சொந்தங்களாலும் உங்களுக்குத் தொல்லைகளே உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் பிற்போக்கான நிலை உண்டாகும். வீடு, வண்டி வாகனம் ஆகியவற்றில் வீண் செலவுகளும் சிரமங்களும் ஏற்படும். சிலர் வீடு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தால் அதிக விரயங்கள் உண்டாகும். இதனால் இரட்டிப்பு செலவுகள் ஏற்படும். சிலருக்கு வீடு அல்லது அலுவலக இடமாற்றம் உண்டாகும். அலைச்சலும் ஏற்படும். நீங்கள் செல்லும் இடம் வசதி குறைவுள்ள இடமாக இருக்கும்.

தந்தையின் நலனில் கவனம் தேவை. தந்தைக்கு அடிக்கடி இடமாற்றங்களும் சிரமங்களும் உண்டாகும். வம்பு, வழக்கு போன்றவற்றிற்காக விரயம் செய்யும் நிலையும் தந்தைக்கு உண்டாகும். கடன் தொல்லைகளும் இருக்கும். ஒரு கடனை அடைப்பதற்குள் அடுத்த கடன் உருவாகிவிடும். தந்தைக்குக் கூட்டுத் தொழிலில் சில இழப்புகள் உண்டாகும். பண விரயமும் பொருள் விரயமும் ஏற்படும். சொந்தங்களால் தந்தைக்குச் சில அவமானங்கள் உண்டாக வாய்ப்புண்டு. ஆதலால் அவர் உறவினர்களிடம் அளவோடு நடந்து கொள்வது நல்லது. ஏற்கெனவே உறவினர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால் அவை தற்போதும் தொடர வாய்ப்புள்ளது.

மூத்த சகோதரர்களுக்கு நிலையான தொழிலும் நன்மதிப்பும் உண்டாகும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலையில் உள்ளவர்களுக்கு சிற்சில பிரச்சினைகள் உண்டாகும். இருப்பினும் அவற்றை சமாளித்து வெற்றி பெற வாய்ப்புண்டு. கடன் கேட்ட இடத்தில் கால தாமதம் ஏற்பட்டு பிறகு கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் சில பிரச்சினைகளும், பாகப் பிரிவினையில் சில குளறுபடிகளும் நடக்க வாய்ப்புண்டு. இதனால் சகோதரர்களிடம் பகை உண்டாகும். ஆதலால் இந்தப் பிரச்சினைகளைப் பெரியோர் முன்னிலையில் பேசித் தீர்த்துக் கொண்டால் பிரச்சினைகள் தீர வாய்ப்புள்ளது.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளால் சில எச்சரிக்கைகள் வரும். உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களிடமும், சக ஊழியர்களிடமும் கவனமாக நடப்பது நல்லது. இல்லையெனில் உங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலதிகாரிகளிடம் கூறி உங்களுக்குக் கெட்ட பெயரை உண்டாக்குவார்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாகச் செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்களும் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். உடல்நலக் குறைவுகளால் மருத்துவச் செலவுகளும் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் செய்ய வேண்டி இருக்கும்.

சனி பகவான் 3-ஆம் பார்வையாக உங்களது ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் செய்தொழிலில் ஏற்ற- இறக்கமான பலன் காணப்பட்டாலும் தொழிலில் பாதிப்பு ஏற்படாது. நிலையாகச் செயல்படும்! பிற்பகுதியில் லாபத்தையும் நற்பலனையும் தரும் என்று எதிர்பார்க்கலாம். தொழிலில் புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வேலையில் பாராட்டு கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் அதிக உழைப்பு தேவைப்படும்.

சனி பகவான் 7-ஆம் பார்வையாக உங்களது குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் உண்டாகும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். பணப்பற்றாக்குறை இருக்காது. தேவையான பணம் சரியான நேரத்தில் வந்துசேரும். வாழ்க்கைத் துணையால் பணவரவு உண்டாகும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்காமல் உங்களது பணியை மட்டும் செய்து கொண்டிருந்தால் எந்தவிதமான வீண் பிரச்சினைகளும் ஏற்படாமல், சொல்வதை அனைவரும் கேட்டு அதன்படி செயல்படுவார்கள். இதனால் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.

சனி பகவான் 10-ஆம் பார்வையாக உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் பூர்வீக சொத்துகளில் மாற்றங்கள், சிர்திருத்தங்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகளால் சில அவமானங்களும் கௌரவக் குறைவுகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளால் கௌரவ இழப்புகளும் மரியாதைக் குறைவும் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் நாட்டமில்லாமல் பொழுதுபோக்கு, வேடிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கல்வியில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு சிரமங்களைக் கொடுப்பார்கள்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2009- செப்டம்பர் முதல் பத்து மாத காலம் கும்ப ராசிக்கு 7-க்குடைய சூரியன் சாரத்தில் சனி சஞ்சாரம் உங்களுக்குச் சாதகமாகவே அமையும். திருமண யோகம், கணவன்- மனைவி ஒற்றுமை, பிரிந்த குடும்பம் சேர்ந்து வாழ்வது போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம். சிலருக்குப் புதிய தொழில் வாய்ப்பும் தனவருவாய் யோகமும் உண்டாகும். எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையும் தைரியமும் உருவாகும்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2010- ஜூலை முதல் 14 மாத காலம் கும்ப ராசிக்கு 6-க்குடைய சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இக்காலக் கட்டத்தில் புதிய கடன்கள் உருவாகும். சத்ரு ஜெயம் உண்டாகும். நோய் நிவர்த்தியாகும். புதிய தொழில் வாய்ப்புகளும் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2011- செப்டம்பர் முதல் ஆறு மாத காலம் சனி பகவான் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். கும்ப ராசிக்கு 3, 10-க்குடைய செவ்வாயின் சாரம் என்பதால் சகோதரவகையில் சகாயமும் நன்மையும் உண்டாகும். தொழில் துறையில் முன்னேற்றமும் நண்பர்கள் உதவியும் கூட்டுத் தொழில் ஆரம்பம் போன்ற சுபப் பலன்கள் உண்டாகும்.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி கடினமான முயற்சிகளுக்குப் பிறகு காரிய வெற்றியையும், சோதனைகளுக்குப் பிறகு சாதனைகளையும் செயல்படுத்திக் கொடுக்கும்., உடன் பிறந்தவர்கள் வகையில் மனக்கசப்புகள் மாறி நட்பும் நல்லுறவும் மலரும். பொருளாதாரத்தில் ஏற்ற- தாழ்வுகள் இருந்தாலும் தேவைக்கேற்ற தனவரவு இருக்கும்.

சதய நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி நற்பயனைத் தருவதோடு ஆன்மிக ஈடுபாடு, கோவில் திருப்பணி, அறக்கட்டளைத் துறையில் கௌரவ பதவி, மதிப்பு, மரியாதை ஆகியவற்றை ஏற்படுத்தும். ஜோதிடம், மருத்துவம், மாந்திரீக பயிற்சியில் நாட்டமும் ஈடுபாடும் உண்டாகும். ஆன்மிகப் பயணம் ஆத்மாவுக்கு நிறைவு ஏற்படுத்தும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி தொடக்கத்தில் கடன்களையும் போட்டி- பொறாமைகளையும் எதிர்ப்பு- இடையூறுகளையும் தந்தாலும், வாழ்க்கைத் தரமும் தொழில்துறையும் பாதிக்காத அளவில் செயல்படும். வரவுக்கு மீறிய செலவுகளை ஏற்படுத்தும். அதைப் பயனுள்ள பலன்தரும் செலவுகளாக மாற்றிக் கொள்வது உங்கள் பொறுப்பு.

பரிகாரம்
பரமக்குடி அருகில் நயினார்கோவில் என்ற ஊரில் நாகநாத சுவாமி கோவிலில் சனீஸ்வரர் தனியாக இருக்கிறார். அவரை வழிபடலாம்.

மகரம்- Magaram - Sanipeyarchi palangal 2009

மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசி அன்பர்களே!
மகர ராசியில் பிறந்த நீங்கள் சொல்லில் உறுதி கொண்டிருப்பீர்கள். சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வீர்கள். இசை ஞானம் கொண்டவர். இசையில் ஆர்வம் உண்டு. கடன் பெறுவதும் மற்றவருக்குக் கடன் கொடுப்பதும் உங்களுக்குப் பிடிக்காத செயல்களாகும். சகோதரர்களிடமிருந்து பிரிந்து வாழ்வீர்கள். அவர்களால் பண உதவியோ ஆதரவோ கிட்டாது. அன்னையின் அன்பும் ஆதரவும் நன்கு அமையும். ஆனால் தாய்க்கு அடிக்கடி பிணி, பீடை வாட்டிவிடும். நீங்கள் ஆடம்பர வசதியையோ செல்வச் சிறப்பையோ விரும்ப மாட்டீர்கள். தனிமையையும் அமைதியான வாழ்க்கையையும் விரும்புவீர்கள். கிடைத்ததைக் கொண்டு திருப்தியாக வாழ்வீர்கள்.

சுயமாக வீடும் வாகனமும் நன்கு அமையும். கல்வியில் தேர்ச்சி பெற்று உயர்தரக் கல்வியும் பயில வாய்ப்புண்டு. பெண் சந்ததியே அதிகம் இருக்கும். மக்கள் அனைவரும் நல்ல புகழ், செல்வம் பெற்று வாழ்வார்கள். புத்திர, புத்திரிகளின் பரிபூரண அன்பைப் பெறுவீர்கள். பித்தம், உஷ்ணம் சம்பந்தமான பிணிகள் நடு வயதிற்கு மேல் ஏற்படும். கடன் தொல்லை, பகை- விரோதம், கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிக்கல் ஏற்படும். உயர்ந்த ஞானமும் தெளிந்த அனுபவமும் மிகுதியாகக் கொண்டிருப்பீர்கள். ஆரம்பகாலத்தில் ஆதரவற்ற வாழ்க்கையாய் இருந்தாலும் சில காலத்திற்குப் பின் சுகமும் உற்சாகமும் குறையாமல் முன்னேறி வாழ்வீர்கள்.

சுயநலம் கொண்டிருப்பீர்கள். அவசர புத்தியினால் தீய விளைவைச் சந்திப்பீர்கள். கற்பனை வளம் மிகுந்தும் எதையும் சோதனை செய்து பார்ப்பதில் ஆர்வமும் கொண்டிருப்பீர்கள். சிலவேளைகளில் நிலையான குணமில்லாமல் காலத்தை வீணாக்குவீர்கள். மற்றவர்களைச் சுலபமாக நம்பமாட்டீர்கள். ஆன்மிகத்தில் பற்று கொண்டிருப்பீர்கள். கோவில், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்ய மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். உங்களை உயர்வாக எண்ணிக் கொள்ளும் தற்பெருமை கொண்டிருப்பீர்கள். புகழ்ச்சிக்கு மயங்குவீர்கள்.

எதையும் பெரிய அளவில் செய்யும் திறன் கொண்டிருப்பீர்கள். அது மற்றவர்களைப் பாதிக்கவும் செய்யும். எதிர்பாராத செல்வம் தேடி வரும். வாழ்க்கையில் அநேக கஷ்டங்களைச் சந்தித்து முன்னேறுவீர்கள். உயர்ரக ஆடைகளையே உடுத்துவீர்கள். சுவை குன்றாத உணவுப் பொருட்களையே நேரம் தவறாமல் உட்கொள்வீர்கள். தன்னம்பிக்கை மிகுந்தும் உழைப்பில் நம்பிக்கை கொண்டும் இருப்பீர்கள். மற்றவர்கள் தீங்கு செய்தாலோ அவமதித்தாலோ மன்னிக்க மாட்டீர்கள். அவர்கள் உங்கள் காலில் விழும்வரை வைராக்கியத்துடன் வாழ்ந்து காட்டுவீர்கள். மற்றவரிடம் சொல்லி அவர்களை அவமானப்படுத்துவீர்கள். உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ற மனைவி அமைவாள்.

இதுவரை உங்களது ராசிக்கு எட்டாமிடத்தில் அஷ்டமச்சனியாக இருந்து வந்த சனி பகவான் உங்களுக்குப் பல பிரச்சினைகளையும் சிக்கல்களையும் அதிகமாகவே தந்தார். பதவியில், உத்தியோகத்தில் பிரச்சினைகளும் இடமாற்றமும் அலைச்சலும் இருந்தது. ஏமாற்றம், விரயம் இருந்தது. தாயாருக்கு உடல் நிலை பாதித்து, அதனால் மன தைரியம் இழந்து தேவையற்ற வீண் குழப்பங்களுடன் காணப்பட்டீர்கள். வீடு மாற்றம், அலுவலக மாற்றம், தொழில் மாற்றம் ஏற்பட்டது. வசதியான வீட்டில் இருந்தவர்கள் சிலர் இடமாற்றத்தால் வசதிக் குறைவான வீட்டிற்குக் குடிபோகும் சூழ்நிலை ஏற்பட்டது. செய் தொழிலில் நஷ்டங்களும் இழப்புகளும் ஏற்பட்டது.

இப்போது சனி பகவான் உங்களது ராசிக்கு ஒன்பதாமிடமான பாக்ய ஸ்தானத்திற்குப் பெயர்ச்சியாகிறார். உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் யாவும் தீர்ந்துவிடும். பதவியில் கௌரவமும் மதிப்பும் கூடும். புதிய பதவிகள் கிடைக்கும். தைரியமும் வீரியமும் அதிகமாகும். பெரியோர்களின் சொற்படி கேட்டு நடப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவார்கள். முன்பிருந்ததைவிட தற்போது அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள். பட்டப்படிப்பு படிக்கவும் வாய்ப்புகள் தேடிவரும். மனதில் தெளிவும் நிம்மதியும் பிறக்கும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் அல்லது விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. நீங்கள் மனதில் எண்ணிய காரியங்கள் யாவும் படிப்படியாக வெற்றியடையும். கணவன்- மனைவி இடையே சிற்சில பிரச்சினைகள் உருவாக வாய்ப்புண்டு. யாரேனும் ஒருவர் அமைதியாக இருப்பது நல்லது. இல்லையெனில் பேச்சால் பிரச்சினை வளர்ந்து கருத்து வேறுபாடு அல்லது பிரிவு வரை கொண்டு வந்துவிடும். வாழ்க்கைத் துணைக்குப் பணப் பிரச்சினைகள் இருக்க வாய்ப்புண்டு. பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. சகோதரர்களால் தேவையான உதவியும் அனுகூலமும் கிடைக்கும்.

வீடு, வண்டி வாகனம் ஆகியவற்றில் சிற்சில செலவுகளும் புதிதாக வீடுகட்டும் அமைப்பும் உண்டாகும். வாகனத்தை மாற்றவோ அல்லது புதிதாக வாகனம் வாங்கவோ முயற்சி செய்வீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். செல்லும் இடத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடிக் கொண்டே போகும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவர். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். தாயாருக்கு சிற்சில உடல் உபாதைகள் உண்டாக வாய்ப்புண்டு. இருப்பினும், உடல் உபாதைகள் நிரந்தரமாக இல்லாமல் உடனே நிவர்த்தியாகிவிடும். தாயாருக்கு அலைச்சல் அதிகமாகும். சொந்தங்களால் சில மரியாதைக் குறைவும், உங்கள் பேச்சுக்கு மதிப்பு இல்லாமலும் போக வாய்ப்புண்டு. ஆதலால் உங்களது மதிப்பு குறையாமல் நடந்து கொள்ளுங்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்க செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். சில பொருட்களுக்காக வெளியில் வட்டிக்கு கடன் வாங்கும் சூழ்நிலையும் உருவாகும்.

ஆடம்பரப் பொருட்களை முடிந்தவரை வாங்காமல் இருந்து பணத்தைச் சேமிக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் நீங்கள் எதிர்பாராத அளவிற்கு கடன் வளர்ந்துவிடும். நண்பர்களிடம் உதவியை எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் ஏற்கெனவே வெளியில் வாங்கியிருந்த கடனை அடைப்பதற்குச் சிரமப்படுவீர்கள். இருப்பினும் மெல்ல மெல்ல ஓரளவிற்கு கடனை அடைத்து நிலைமையைச் சமாளிப்பீர்கள். உங்களது கௌரவம் பாதிக்காமல் பார்த்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் கல்விக்காகக் கடன் வாங்க நேரிடும். வம்பு, வழக்கு சம்பந்தமான பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை பெரியோர்களின் முன்னிலையில் பஞ்சாயத்து பேசி தீர்த்துக் கொள்ளலாம். பூர்வீகச் சொத்துகளால் கௌரவமும் ஆதாயமும் இருக்கும். பல வருவாயும் கிடைக்கும். தந்தைக்கு அவருடைய நண்பர்களால் உதவியும் அனுகூலமும் உண்டாகும். தந்தை கூட்டுத் தொழில் செய்து கொண்டிருந்தால் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். தந்தைக்கு அலைச்சலால் சிறிது உடல்நலம் பாதிப்புகள் ஏற்பட்டு பின் சரியாகும். தெய்வ ஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். மூத்த சகோதர்களுக்கு நன்மை உண்டாகும். கௌரவமும் அந்தஸ்தும் கூடும். மூத்தோர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வம்பு, வழக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

குடும்பத்தில் சிற்சில குழப்பங்களுடன் சங்கடங்களும் உண்டாக வாய்ப்புண்டு. எங்கு பேசினாலும் கவனமுடன் பேசுவது நல்லது. இல்லையெனில் வீண் பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புண்டு. பணப் பற்றாக்குறை அவ்வப்போது ஏற்படும். செய்தொழிலில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அதிக செலவுகளைச் செய்ய வேண்டி இருக்கும். வேலை தேடி அலைந்தவர்களுக்கு தற்போது நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. குறுக்கு வழியைத் தேட வேண்டாம். நேர்மையாகவே செயல்படுங்கள். உங்கள் தகுதிக்கேற்ப வேலை கிடைக்கும்.

சனி பகவான் 3-ஆம் பார்வையாக உங்களது ராசிக்கு லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால் செய்தொழிலில் லாபங்கள் குறைந்து காணப்படும். மூத்த சகோதரர்கள் தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மூத்த சகோதரர்களுக்கு உடல்நிலையில் பாதிப்புகள் தோன்ற வாய்ப்புண்டு. உங்களுக்கு உள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்து கொள்ள முயன்றாலும் விரைவில் தீராமல் இழுபறி நிலையாக இருக்கும். வரவேண்டிய லாபங்கள்கூட வராமல் இருக்கும்.

சனி பகவான் 7-ஆம் பார்வையாக உங்களது ராசிக்கு தைரிய- வீரிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்களுக்குத் தைரியமும் வீரியமும் அதிகமாகும். எக்காரியத்திலும் துணிந்து இறங்குவீர்கள். எவரைப் பற்றியும் கவலைப் படமாட்டீர்கள். சமூகத்தில் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் எதிர்த்து நிற்பீர்கள். உத்தியோகத்தில், பதவியில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வும் சலுகைகளும் ஊதிய உயர்வும் நிச்சயம் கிடைக்கும். மாணவர்கள் போட்டி, பந்தயம் ஆகியவற்றில் கலந்து கொண்டு வெற்றி பெறுவார்கள். உங்களது மதிப்பும் அந்தஸ்தும் உயரும். இளைய சகோதரர்களால் உதவி கிடைக்கும்.

சனி பகவான் 10-ஆம் பார்வையாக உங்களது ராசிக்கு ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் உங்களுக்கு எதிரிகள் ஏற்படலாம். ஆனால் அவர்களை எளிதாக வெற்றி கொள்வீர்கள். எதிரிகளால் பாதிப்புகள் ஏற்படாது. உடலில் நோய் உண்டானாலும் தானாக நிவர்த்தியாகிவிடும். வம்பு, வழக்கு, கோர்ட், பஞ்சாயத்து ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து உங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளே வரும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்கடங்கி இருக்கும். கேட்ட இடங்களில் கடனும் கிடைக்கும். உதவியும் கிடைக்கும்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2009- செப்டம்பர் முதல் பத்து மாதகாலம் சனி பகவான் மகர ராசிக்கு 8-க்குடைய சூரியன் சாரத்தில் (உத்திரம்) சஞ்சாரம் செய்வார். ராசிக்கு 8-க்குடையவர்- சனி நின்ற ராசிக்கு 12-க்குடையவர். ஆகவே இக்காலம் விரயம், வீண் அலைச்சல், தண்டம், தீர்வை, ஏமாற்றம், இழப்பு, விபத்து ஆகிய பலன்களையே சந்திக்கக்கூடும். சனிக்கிழமைதோறும் அவரவர் வயதுக்கேற்ற எண்ணிக்கையளவு மிளகு எடுத்து, ஒரு புதுத்துணியில் பொட்டலம் கட்டி, கால பைரவர் சந்நிதியில் மண்விளக்கில் நெய் நிரப்பி மிளகு தீபம் ஏற்றி வழிபடவும். 19 சனிக்கிழமை நெய்தீபம் ஏற்றினால் புயல்போல வரும் துன்பம் பனிபோல விலகும்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்:
2010- ஜூலை முதல் 14 மாதகாலம் மகர ராசிக்கு 7-க்குடைய சந்திரன் சாரத்தில் சனி சஞ்சாரம் செய்வார். கடந்த பத்து மாதம் அனுபவித்த கஷ்டத்துக்கு இது ஆறுதல் பரிசு தரும் காலமாக அமையும். சுபவிரயம், புதிய தொழில் வாய்ப்பு, குடும்பத்தில் நிம்மதி, ஒற்றுமை உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்:
2011- செப்டம்பர் முதல் ஆறு மாதகாலம் சனிபகவான் செவ்வாயின் சாரத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். மகர ராசிக்கு செவ்வாய் 4, 11-க்குடையவர் என்பதால் தேக ஆரோக்கியம், பூமி, வீடு, வாகன மாற்றம் அல்லது யோகம், கல்வி முன்னேற்றம், பதவி யோகம் எதிர்பார்க்கலாம்.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு
இந்த சனிப் பெயர்ச்சி சோதனை, வேதனை நிறைந்ததாகவும் ஏமாற்றம், இழப்பு, விபத்து இவற்றைத் தருவதாகவும் இருக்கும். தெய்வ நம்பிக்கையுடனும் ஒழுக்கம் கட்டுப்பாடாகவும் செயல்பட்டால் சனி பகவான் அனுதாபத்தைப் பெற்று சிரமங்களைத் தவிர்க்கலாம்.

திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு
இந்த சனிப் பெயர்ச்சி உயர்வு- தாழ்வு, நன்மை- தீமை, ஏற்றம்- இறக்கம், வரவு- செலவு என்று இரண்டையும் கலந்த பலன்களைத் தரும். கையளவு இதயத்தில் கடல் அளவு ஆசைகள் உதயமாகும். ஆனால் ஒன்றோ இரண்டோதான் நிறைவேறும். மனதைத் தளரவிடாமல் நம்பிக்கையோடு செயல்பட வேண்டும்.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு நல்லதைச் செய்யும். தடைப்பட்ட கல்வியைப் பூர்த்தி செய்து பட்டம் பெறலாம். புதிய பதவிகள் கிடைக்கும். தொழில் யோகம், வேலை யோகம் அமையும். தேக நலனும் பலமடையும். தாய் சுகம், தன் சுகம், பூமி, வீடு, வாகன சுகம் ஏற்படும். ஜாதக தசா புக்திகளை அனுசரித்து யோகம் கூடும்.

பரிகாரம்
புதுச்சேரியில் பஞ்சவடி ஆஞ்சனேயர் பிரம்மாண்டமாக இருக்கிறார். சனி பகவானின் கெடுதல்களை வடிகட்டி நல்லதாக மாற்றும் வல்லமை ஆஞ்சனேயருக்கும் கால பைரவருக்கும்தான் உண்டு. பஞ்சவடி ஆஞ்சனேயரை வழிபடவும்.

தனுசு - Dhanusu - Sanipeyarchi palangal 2009

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசி அன்பர்களே!
தனுசு ராசியில் பிறந்த நீங்கள் எடுத்த எந்தக் காரியத்தையும் திறமையுடன், வெற்றியுடன் முடிப்பீர்கள். மற்றவருக்கு மரியாதை கொடுப்பீர்கள். ஆனால் யாருக்கும் கீழ்படிந்து அடிமையாவது பிடிக்காது. கள்ளம், கபடமின்றி எல்லாரிடத்திலும் உள்ளன்புடன் பழகுவீர்கள். வெளிப்படையாக மனதில் இருப்பது உதட்டில் வெளிவரும். சிலநேரங்களில் வெகுளித்தனமாகவும் பேசுவீர்கள். கடவுளிடத்தில் அந்தரங்கமாக ஆத்மார்த்தமான பக்தியைக் கொண்டிருப்பீர்கள். கோபத்தில் நீங்கள் பேசும் வார்த்தைகள் சமயத்தில் கூரிய அம்பு போல பாயும். உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என நினைத்து கற்றும் கொடுப்பீர்கள். தீயவர்களுடன் நட்பு கொள்ள மாட்டீர்கள். பிடிவாதம், வேகம், கோபம் கொண்டிருப்பீர்கள். விளையாட்டு, உடற்பயிற்சிகளில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். வருங்காலத்தை முன்கூட்டி உரைக்கும் தீர்க்க தரிசன உள்ளுணர்வு சக்தி கொண்டிருப்பீர்கள்.

கருத்தரங்கு, வழக்காடு மன்றம் போன்ற கூட்டங்களில் சுவைபட மணிக்கணக்கில் பேசுவீர்கள். செல்வாக்கு உண்டு. சகோதர விருத்தி குறைவு; ஒற்றுமையும் குறைவு. இளவயது முதலே சுயதொழில் செய்யவே ஆர்வம் இருக்கும். சிரமம் இருந்தாலும் நேர்மையான வழியில் பணம் சேர்க்கவே ஆசைப்படுவீர்கள். குறைந்த உழைப்பில் நிறைந்த லாபம் பெறும் தொழில்களைச் செய்யவே ஆசைப்படுவீர்கள். தாய்க்கு உங்கள்மீது பாசம் அதிகம். கல்வியை விட உயர்ந்த ஞானமும் தெளிந்த அனுபவமும் மிகுதியாக இருக்கும். கல்வியில் பெரிய படிப்பு பயில இயலாமல் தடை ஏற்படும். படிப்புக்குத் தகுதியான வேலை கிடைக்காது. கற்பனை அதிகம். அதனால் உங்கள் வாழ்க்கைத் துணைவியும் தொழிலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என கற்பனை செய்து உருவம் தருவீர்கள். ஆனால் நடைமுறையில் நடைபெறால் ஏமாற்றம் அடையலாம். புத்திரர் சந்ததி அதிகம் ஏற்படுவதில்லை. ஒன்றிரண்டு புத்திர பாக்கியமே இருக்கும். அதற்காகக் கவலைப்பட மாட்டீர்கள்.

எதையும் விளையாட்டுப் போக்கில் எடுத்துக் கொள்ளும் உள்ளம் கொண்டவர் என்பதால் எதற்காகவும் கவலைப்பட மாட்டீர்கள். வாயு சம்பந்தமான பிரச்சினைகள் வரலாம். கடன், நோய், எதிரிகளால் வம்பு, வழக்கு இவற்றில் ஏதேனும் ஒன்று நிரந்தரமாக இருக்கும். சட்ட விரோதமாகத் தீய வழிகளில் சென்று பணம் சம்பாதிக்க மாட்டீர்கள். நீதித்துறை மற்றும் மருத்துவத் துறைகளில் இருப்பவர்கள் அநேகர் உங்கள் லக்னமே! தகப்பனாருடன் ஒற்றுமை குறைந்து காணப்படும்.

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருந்த சனி பகவான் உங்களுக்கு நற்பலனைத் தந்தார். கணவன் - மனைவி இடையே சுமூகமான உறவு இருந்தது. செய்தொழிலில் சில பிரச்சினைகள் இருந்தாலும் லாபங்களும் இருந்தது. மூத்த சகோதரர்களால் ஆதரவும் உதவியும் கிடைத்தது. வெளியூர் பயணங்களால் கௌரவமும் அந்தஸ்தும் கிடைத்தது. அதிக அலைச்சலும் சோர்வும் உண்டானது. தாயாருக்குச் சிறு சிறு உடல் நலக் குறைபாடுகளும் இருந்தது. சிலர் வெளிநாட்டு வேலைக்குப் போய் சம்பாதித்தார்கள். தந்தைக்கு அலைச்சலும் நன்மைகளும் இருந்தது. கௌரவம் பாதிக்காத வகையில் நடந்து கொண்டீர்கள்.

இனி சனிபகவான் உங்களது ராசிக்குப் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி செய்கிறார். பாவகிரகம் கேந்திரம் பெறுவது நல்லது. செய்தொழிலில் மதிப்பும் மரியாதையும் உயரும். நிலையான தொழில் அமைய வழி உண்டாகும். விலகிச் சென்றவர்கள் தானாகவே தேடி வருவார்கள். முன்பிருந்ததை விட தற்போது மதிப்பு கூடும். மனதில் திட்டமிட்ட காரியங்களைச் செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். அன்னிய இன, மதத்தவரால் உதவியும் ஆதரவும் கிடைக்கும். தாயாருக்கு உடல் நிலை சிறப்பாக இருக்கும். முன்பிருந்ததைவிட தற்போது ஆரோக்கியமாக இருப்பார். வீடு, வண்டி வாகனம், கால்நடைகளால் வருவாயும், இரும்பு சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். சொந்தங்களால் பெரும் உதவியை எதிர்பார்க்க முடியாது. பொருளாதார நிலை ஓரளவு திருப்தி அடையும் வகையில் இருக்கும்.

உங்களுடைய வழக்கமான சிரிப்பால் பல காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். பலரும் வியக்கும்படி உங்களுடைய தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் காண்பீர்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது பொறாமை கொண்டு உங்களுக்கு எதிரான நடிவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வும், பல சலுகைகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். பிள்ளைகளால் பெருமையும் மதிப்பும் உயரும்.

மூத்த சகோதரர்களால் செலவுகளும், சில வாக்குவாதங்களும் உண்டாகும். உங்கள் மனம் சங்கடப்படும்படி நடந்து கொள்வார்கள். தந்தைக்குச் செல்லுமிடங்களில் மதிப்பும் மரியாதையும் கூடும். தந்தை கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மிகவும் சிரமப்படுவார். இருந்தாலும் எப்படியாவது வாக்கைக் காப்பாற்றிவிடுவார். குடும்பத்தில் அவ்வப்போது சில சலசலப்புகள் ஏற்பட்டு மறையும். வெளியில் வாங்கிய கடனை படிப்படியாக அடைத்துவிடுவீர்கள். மேலும் கடன் வாங்கவும் முயற்சி செய்வீர்கள். கடன் வகையில் பிரச்சினை வராமல் தடுக்கலாம்.

சில மரியாதைக் குறைவு நிகழ்வுகளும் நடைபெற வாய்ப்புண்டு. பூர்வீகச் சொத்துக்கள் பாகப்பிரிவினையாக வாய்ப்பு உண்டு. இதில் சில சங்கடங்களும் உண்டாகும். குலதெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து செய்துவந்தால் நற்பலன்கள் உண்டாகும். திருமண விஷயத்தில் சில தடைகள் இருந்தாலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலை தேடுவோர்க்குத் தகுதிக்கேற்ப நல்ல உத்தியோகம் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்ய முயற்சி செய்பவர்கள் அதற்கான வேலையில் ஈடுபட வழி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளிடமிருந்து பரிசும் பாராட்டும் கிடைக்கும். செய்தொழிலில் அலைச்சலும் இருக்கும். அலைச்சலுக்குத் தகுந்த ஆதாயமும் இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பெண்களால் அனுகூலமும் லாபமும் உண்டாகும். குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் இருக்கும். குடும்பத்துடன் தெய்வ ஸ்தலங்களுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

குடியிருக்கும் இடங்களில் சில மாற்றங்கள் செய்ய எண்ணுவீர்கள். சிலருக்குச் செய்தொழில் இடமாற்றமோ அல்லது தொழில் மாற்றமோ உண்டாக வாய்ப்புண்டு. போட்டி, பந்தயங்களில் சில தோல்விகள் உண்டாகலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு மக்களின் ஆதரவும், சில கௌரவப் பதவிகளும் கிடைக்க வழியுண்டு. மேலிடத்தில் உள்ளவர்களின் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் தற்போது தடையின்றி சிறப்பாக நடக்கும். புதியவர்களின் நட்பும் அன்பும் கிடைக்கும். வீடு, வாகனம், நிலம் ஆகியவை வாங்கவும் வாய்ப்புண்டு. நிலையான அசையாச் சொத்துக்கள் சேரவும் அதிக வாய்ப்புண்டு.

சனி பகவான் 3-ஆம் பார்வையாக உங்களது ராசிக்குப் பன்னிரண்டாம் இடமான விரய ஸ்தானத்தைப் பார்ப்பதால் வீடு, வாகனங்களுக்குச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகலாம். பணவரவு ஒருபுறம் இருந்தாலும் வரும் பணத்தைச் சேமித்து வைக்கமுடியாத நிலை உண்டாகும். தந்தைக்கு உடல் நலக்குறைவால் மருத்துவச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் ஏற்படும்.

சனி பகவான் ஏழாம் பார்வையாக உங்களது ராசிக்கு நான்காமிடமான சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் வீடு, வாகனம் விருத்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளிடமிருந்து நற்பெயரும் பாராட்டும் கிடைக்கும். தாயாருக்கு உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உயர்கல்வி, மேற்படிப்பு பயிலவும் வாய்ப்பு கூடிவரும். வியாபாரம் நல்ல லாபத்துடன் இருக்கும். வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்கவும் வாய்ப்புகள் தேடிவரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

சனி பகவான் 10-ஆம் பார்வையாக உங்களது ராசிக்கு ஏழாமிடமான களஸ்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக வாய்ப்புண்டு. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர்களால் தொல்லை இருக்காது. கெட்டவர்களின் நட்பு தானாகத் தேடி வரும். ஆதலால் அதைத் தவிர்த்து விடுவது நல்லது. ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் சிலருக்கு இருதார யோகம் அமையும்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
தனுசு ராசிக்கு ஒன்பதுக்குடைய சூரியன் சாரத்தில் உத்திர நட்சத்திரத்தில் 2009- செப்டம்பர் முதல் பத்து மாத காலம் சனி சஞ்சாரம் செய்வார். சூரியனும் சனியும் பகை கிரகம். ஆனாலும் இப்போது தற்காலிக நட்புக் கிரகமாவதால் உங்களுக்குப் பூர்வீகச் சொத்து அல்லது தந்தை வழி பிரச்சினைகள் தீர்ந்து நன்மை உண்டாகும். தந்தை- பிள்ளை வகை நட்பு, உறவு பலப்படும். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு நாணயம் காப்பாற்றப்படும். தேக நலனிலும் முன்னேற்றம் தெரியும்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2010- ஜூலை முதல் 14 மாத காலம் தனுசு ராசிக்கு அட்டமாதிபதியான சந்திரன் சாரத்தில் சனி சஞ்சாரம் செய்வார். ஜாதக தசா புக்திகள் பாதகமாக இருந்தால் தேக நலத்தில் பாதிப்பும் கவலையும் வைத்தியச் செலவும் உண்டாகும். ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் தேக சுகமும் கவலை நிவர்த்தியும் உற்சாகமும் உண்டாகும். வாழ்க்கையில் வளமும் நலமும் பெருகும். பிதுர்வகையில் ஏமாற்றமும் விரயமும் ஏற்படலாம்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சார பலன்
2011- செப்டம்பர் முதல் ஆறு மாத காலம் தனுசு ராசிக்கு 5, 12-க்குடைய செவ்வாயின் சாரத்தில் சனி சஞ்சாரம் செய்வார். உங்கள் ஆசைகளும் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். குடும்பத்தில் திட்டங்களும் நிறைவேறும். குடும்பத்தில் சுபச்செலவுகள் உருவாகும். பிள்ளைகளுக்கு சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். சிலருக்குத் தொழில் மாற்றம், வேலை மாற்றம், வீடு மாற்றம் போன்ற அமைப்புகளும் உருவாகும். அந்த மாற்றம் முன்னேற்றமான மாற்றமாக அமையும்.

மூல நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி ஏற்றம் தரும் மாற்றமாக அமையும். உத்தியோகம், தொழில் ஆகியவற்றில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டில் பணி புரிகிறவர்களுக்குத் தனி செல்வாக்கும் இனிய எதிர்காலமும் அமையும். வீடு, மனை பாக்கியமும் திருமணம், புத்திர பாக்ய யோகமும் உண்டாகும்.

பூராட நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி நீண்டகால கனவுத் திட்டங்களை நிறைவேற்றும். தொழில், உத்தியோகத்தில் செல்வாக்கு, வளர்ச்சியை உருவாக்கும். விரும்பிய இடப் பெயர்ச்சி அமையும். பிள்ளைகளின் ஆதரவும் அன்பும் ஒத்துழைப்பும் மனதுக்கு ஆறுதலையும் நிறைவையும் ஏற்படுத்தும். மனறிறைவும் மகிழ்ச்சியும் உங்கள் நோயை விரட்டியடித்து உற்சாகத்தை உருவாக்கும்.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப்பெயர்ச்சியில் கெடுதல் ஏதுமில்லை என்றாலும் நன்மைகள் தாமதமாகும். அதனால் டென்ஷன் உண்டாகும். மனைவி- மக்கள்- குடும்பத்தார் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதாகக் கற்பனை பயமும் விரக்தியும் அடையலாம். சனி பிற்பகுதியில் எல்லா சங்கடங்களும் நீங்கிவிடும்.

பரிகாரம்
மதுரை - திண்டுக்கல் வழித்தடத்தில் காந்தி கிராமம் அருகிள் சின்னாளப்பட்டியில் அஞ்சலி ஆஞ்சனேயர் கோவில் உண்டு. இது சாளக்கிராமத்தில் வடிவமைக்கப்பட்ட சிலை. அங்கு சென்று வழிபட்டால், சனி பகவான் சங்கடம் போக்கி சஞ்சலம் நீக்கி சந்தோஷத்தைக் கொடுப்பார்.

விருச்சிகம் - Viruchigam -Sanipeyarchi palangal 2009

விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம் கேட்டை முடிய)
விருச்சிக ராசி அன்பர்களே!
விருச்சிக ராசியில் பிறந்த நீங்கள் வேடிக்கையாகப் பிறரை கிண்டல் செய்வது உங்கள் வாடிக்கையாகும். யாருக்கும் பயப்படமாட்டீர்கள். சந்தோஷமாக இருப்பீர்கள். ஆனால் வார்த்தைகளில் அனல் பறக்கும். எதிலும் ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வம் முடிவில் இருக்காது. கொஞ்சம் சோம்பல் கொண்டிருப்பீர்கள். எண்ணத்தால் உயர்ந்து பலவிதமான கற்பனைகளைச் செய்வீர்கள். ஆனால் செயலில் மந்தமாக இருப்பீர்கள். மற்றவர்களைப் போல பணப்பற்றாக்குறை ஏற்படாது. அதேசமயத்தில் பணத் தேக்கமும் இராது. தேவை அறிந்து பணம் உங்களிடம் வந்துசேரும். சகோதர- சகோதரிகளிடம் ஒற்றுமை இராது.

உங்களுக்கென தனி வழி வகுத்துக் கொள்வீர்கள். கஷ்டம், நஷ்டம் ஏற்பட்டாலும் கொள்கையையும் பிடிவாதத்தையும் விட்டுக் கொடுக்கமாட்டீர்கள். எதிர்காலத்தை அறியும் ஆற்றல் கொண்டிருப்பீர்கள். தத்துவங்களையும் வேதாந்தங்களையும் பேசுவீர்கள். சமயத்தில் குடும்பத்தையும்கூட வெறுப்பீர்கள். பெற்றோரின் ஆதரவு உண்டு. அவர்களுடைய வீடு, நிலத்தில் வாழ்வீர்கள். உங்கள் சோம்பலால் சிலவற்றைப் புறக்கணிப்பீர்கள். சொத்து, சுகம் உள்ள குடும்பங்களில் பிறந்தாலும், உங்கள் தகப்பனார் சம்பாதித்த அளவுக்குச் சம்பாதிப்பது கஷ்டம். உற்றார்- உறவினர் தொல்லை தருவார்களேயன்றி ஆதரிக்க மாட்டார்கள்.

சொந்த வீடு இருப்பினும் மிகப் பழமையானதாக இருக்கும். குறை உள்ள வீட்டில் வசிப்பீர்கள். பெரிய வீட்டில் சிதிலமடைந்த அறைகள் மற்றும் சந்து பொந்தாக நுழைதலுமாக இருக்கும். நல்ல புதுமையான- அழகான வீடாக இருந்து அதில் வாழ்ந்தால் நிம்மதி இராது. வயது கடந்த பின்பே சுயமாக மண், பூமி, வீடுகள் ஏற்பட்டு வசதியுடன் வாழ்வீர்கள். பூசப்படாத கட்டிடமாக இருக்கும்.

புத்திக்கூர்மையுடன் செயல்படும் உங்களால் மேன்மை அடைய இயலாது. பட்டப்படிப்பு, மேல்படிப்பு படித்தாலும் பலன் இராது. தொழில்நுட்பக் கல்வி பயில வாய்ப்பு உண்டு. சாதாரணமாக எந்த நோயும் உடலைத் தாக்காது. ஆனால் காயம் ஏற்படுதல், உஷ்ணக்கட்டி, தீப்புண் தழும்பு போன்றவை ஏற்படும். கடன் வாங்குவதில் தயக்கம் கொள்வீர்கள். எவ்வளவு பிரச்சினை வந்தாலும் கலக்கமோ கவலையோ கொள்ளாமல் சிந்தித்துப் பார்த்து சுலபமாக பிரச்சினைகளைச் சமாளிப்பீர்கள். புதுமையாக எதையாவது கண்டுபிடித்து புகழ்பெற முயற்சி செய்வீர்கள். அபாரமான அறிவுக்கூர்மையும், வளமிக்க கற்பனையும், புதுமையான சிந்தனைகளையும் கொண்டிருப்பீர்கள். சகல கலைகளிலும் வல்லவராக இருப்பீர்கள். எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வம் கொண்டிருப்பீர்கள். ஆனால் நேரம் இல்லை என்பீர்கள்.

மந்திர- தந்திர சாஸ்திரங்களை அறிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் ஜாதகத்தையும் தெய்வத்தையும் சில நேரங்களில் வெறுத்தும் பேசுவீர்கள். உங்களுக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். மற்றவரை பேச்சால் துன்புறுத்தி விடுவீர்கள்!

உங்களுடைய ராசிக்கு பத்தாம் இடத்தில் இதுவரை இருந்த சனிபகவான் செய்தொழிலில் லாபமும் புகழும் கிடைக்கச் செய்தார். அடிக்கடி வெளியூர் பயணங்கள் செய்ய வேண்டியிருந்தது. அதிக அலைச்சலும் அதற்கேற்ற பண வருவாயும் கிடைத்தது. புதிய நண்பர்களின் சேர்க்கையும், அவர்களால் லாபமும் உதவியும் இருந்து வந்தது. உபரி வருமானமும் இருந்து வந்தது. ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டானது. கணவன்- மனைவி உறவு சிராகவே இருந்து வந்தது.

இனி உங்களுடைய ராசிக்கு பதினொன்றாம் இடத்திற்குச் சனி பகவான் பெயர்ச்சியாகிறார். தொழிலில் மேலும் நல்ல லாபமும் மதிப்பும் உண்டாகும். உங்களுடைய மதி நுட்பத்தால் பிறர் செய்ய முடியாத காரியத்தைக் கூட நீங்கள் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களினால் லாபம் உண்டாகும். வம்பு, வழக்கு ஆகியவற்றின் முடிவுகள் உங்களுக்குச் சாதகமாகவே இருக்கும். உங்களுக்கு இருந்துவந்த பணப்பிரச்சினைகள் யாவும் தீரும் நேரமிது. எதிரிகளால் இருந்துவந்த தொல்லைகள் தீரும். எதிரியே நண்பனாகும் சூழ்நிலை உண்டாகும். எங்கு சென்றாலும் சிறப்பான வரவேற்பும் அந்தஸ்தும் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு வீடு, வண்டி வாகன யோகம் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்குக் கிடைக்கும். வீட்டில் நவீன பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு சுபகாரியம் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

11-ல் சனி வருவதால் மூத்த சகோதரர்களுக்கு உடல்நிலை சிறிது பாதிக்கும். அலைச்சல் அதிகரிக்கும். பூமி, நிலம், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். நீங்கள் பலருக்கு உதவி செய்வீர்கள். இதுநாள்வரை உங்களிடம் பிரச்சினை செய்து வந்தவர்கள் தானாகவே விலகிவிடுவார்கள். இதுவரை இருந்த பிரச்சினைகளும் கஷ்டங்களும் ஒவ்வொன்றாக நீங்கிவிடும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வும் சலுகைகளும் கிடைக்கும். அரசு வகையில் பல காரிய சாதனைகளும் மேலிடத்தவர்களின் தொடர்பும் உண்டாகும்.

கன்னிச்சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால் செல்வாக்கும் புகழும் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். குடியிருக்கும் இடத்தில் சில பிரச்சினைகள் உருவாகலாம். உங்களது பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் சிரமப்படுவீர்கள். நடப்பவையெல்லாம் ஆண்டவன் செயல் என விட்டுவிடுங்கள். கமிஷன், கான்ட்ராக்ட் ஆகியவற்றில் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மைகளும் பண வரவும் உண்டாகும். தொழில் நிறுவனத்திற்கு நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள்.

5-ஆம் இடத்தைச் சனி பார்ப்பதால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளுக்குப் படிப்பில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். படிப்பினால் பாராட்டும் பரிசும் பெறுவார்கள். பிள்ளைகளைக் கண்டு பெற்றோர் பெருமைப்படுவார்கள். பொருளாதார வசதியும் கூடும். மகளிரால் நன்மையும் உதவியும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை நல்ல லாபத்துக்கு விற்க வாய்ப்புண்டு. தொழிலில் போட்டிகள், எதிர்ப்புகள் இருந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றி காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் திருப்தியான போக்கு உண்டாகும். சிலருக்கு வீடு கட்டுவதற்கான திட்டங்களுக்குக் கடன்பெற வழிவகை உண்டாகும். பழைய கடன் பிரச்சினைகள் யாவும் தீரும். ஆலயங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். தாயாருக்கு அவ்வப்போது உடல்நிலை சிறிது பாதிக்கும். தாயார் எங்கு பேசினாலும் கவனமாகப் பேச வேண்டும். இல்லையெனில் பேச்சால் கஷ்டங்களும் சிரமங்களும் உண்டாகும். தந்தைக்குத் தொழிலில் பதவியும் அந்தஸ்தும் உயரும்.

சனிபகவான் 4-ஆம் இடத்துக்கு 8-ல் வருவதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கலாம். அசௌகரியங்களும் சோர்வும் மந்தத் தன்மையும் உண்டாகும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். அதனால் அலைச்சலும் அதிகரிக்கும். ஒரு காரியத்தை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யும் சூழ்நிலை உண்டாகும். மனதில் ஒருவித பயமும் கலக்கமும் உண்டாகும். போட்டிகள், பொறாமைகள் பலவும் இருந்தாலும் அதையும் மீறி வெற்றி காண்பீர்கள்.

சனிபகவான் ஏழாம் பார்வையாக உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்துக்களால் லாபமும் நன்மையும் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். கௌரவமும் அந்தஸ்தும் உயரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிள்ளைகள் விரும்பியதைச் செய்து கொடுப்பீர்கள். பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். பூமி, நிலம், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சனிபகவான் பத்தாம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தைப் பார்ப்பதால் ஆயுள் விருத்தி உண்டு. மரணபயம் இல்லை. உடல்நலனில் சிறிது பாதிப்பு உண்டாக வாய்ப்புண்டு. ஆயுஷ் ஹோமமும் தன்வந்திரி ஹோமமும் செய்து கொள்ளலாம். தந்தைக்கு உடல்நலக் குறைவும் அதனால் மருத்துவச் செலவுகளும் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். என்றாலும் செலவுகளைச் சமாளிக்க திடீர் தன வரவும் உண்டாக வாய்ப்புண்டு. ஆயுள் குற்றம் வராது. முற்பகுதியில் கஷ்டங்கள் இருந்தாலும் பிற்பகுதி யோகத்தைத் தரும்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2009- செப்டம்பர் முதல் பத்து மாதகாலம் விருச்சிக ராசிக்கு 10-க்குடைய சூரியன் நட்சத்திரத்தில் (உத்திரம்) சனி சஞ்சாரம் செய்வார். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கண்டிப்பும் வெறுப்பும் உண்டாகலாம். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நிர்வாகத்தினரின் பாராட்டும் ஊதிய உயர்வும் உண்டாகும். தொழிலதிபர்களுக்கு சுய தொழில் முன்னேற்றமும் யோகமும் தாராளமான வரவு- செலவும் பணப் புழக்கமும் உண்டாகும். தந்தைவழி நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2010- ஜூலை முதல் 14 மாதகாலம் விருச்சிக ராசிக்கு 9-க்குடைய சந்திரன் சாரத்தில் சனி சஞ்சாரம் செய்வார். இக்காலம் குலதெய்வ வழிபாடும் தெய்வ ஸ்தல யாத்திரையும் பூஜை கைங்கரியங்களும் உண்டாகும். தாய்வழி நன்மைகளை எதிர்பார்க்கலாம். சுபமங்கள காரியங்கள் கைகூடும். பெண்களால் அனுகூலம், ஆதாயம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை அமையும்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2011- செப்டம்பர் முதல் ஆறு மாதகாலம் ராசிநாதன் செவ்வாயின் சாரத்தில் சனி சஞ்சரிக்கும். இக்காலம் உங்கள் திறமைக்கேற்ற பெருமை சேரும். புதிய தொழில் யோகம் அமையும். பகை விலகும். வேலை வாய்ப்புகளும் நல்ல வருமானமும் சேமிப்பும் உண்டாகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சமூகப்பணிகள் தொடர்பான ஈடுபாடுகள் அதிகரிக்கும். கடன்களும் உண்டாகும். அவை சுபக்கடனாகி பொன், பொருள், பூமி, வாகனம், வீடு அமைப்புகள் போன்றவை உண்டாகும். சகோதர வகையில் நிலவிய சச்சரவுகள் விலகும்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு
இந்த சனிப்பெயர்ச்சி குடும்ப சுகம் பெருகும். சுபமங்கள செலவுகள், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் வகுத்த திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் வகையில் நல்லவை நடக்கும். தாராளமான வரவு செலவும் பழைய கடன்கள் அடைபடுதலும் சேமிப்பு உருவாகுதலும் உண்டாகும்.

அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப்பெயர்ச்சி எடுத்த காரியங்களில் வெற்றி, லாபம், பெருமையைத் தரும். வழக்குகள் வெற்றியடையும். பூமி, ரியல் எஸ்டேட் துறையில் லாபம் ஏற்படும். இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் விலகி சுகம் உண்டாகும்.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப்பெயர்ச்சி ஆரம்பத்தில் சோதனை, வேதனை, ஏமாற்றம், இழப்பு, நஷ்டங்களைத் தந்து, பிறகு சாதனை, வெற்றி, லாபம், அனுகூலம் ஆகிய நற்பலன்களைத் தரும். வரவும் செலவும் சம அளவில் காணப்படும். கடன் சுமை குறையும்.

பரிகாரம்
அறந்தாங்கி அருகில் (புதுக்கோட்டை ரோட்டில்) அழியாநிலை என்ற ஊரில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. அங்கு சென்று சிறப்புப் பூஜை செய்யலாம்.

துலாம் - Dhulam - Sanipeyarchi palangal 2009

துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலாம் ராசி அன்பர்களே!
துலாம் ராசியில் பிறந்த நீங்கள் பேசுவதற்கு முன்பே சிரிப்பு வருவது உங்கள் சிறப்பு! இயற்கையாகவே நீங்கள் சுகத்தை அனுபவிக்கக் கூடியவர் அல்ல. மற்றவர்களுக்கு சுகத்தை அளிக்கக் கூடியவர். உங்கள் புன்னகையே புகழ் பெறக் கூடியது. வாழ்க்கையில் சிறு வயதில் பெரும்பாலும் கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து வாழ்க்கையின் பிற்பகுதியில் நல்ல சுகத்தை அனுபவிப்பீர்கள். மண், மனை, வண்டி வாகன வசதியும் செல்வாக்கும் பெற்று வாழ்வீர்கள். புத்திர தோஷம் அல்லது புத்திர கவலை ஏற்படும். பெண் மக்களே அதிகம். பிணி பீடைகள் உங்களுக்கு அதிகம் வராது. சிறு சிறு நோய்கள் ஏற்பட்டு விரைவில் குணமாகும். நேரம் தவறி உணவு உட்கொள்வீர்கள். அதனால் வயிறு சம்பந்தமான கோளாறும் அஜீரணம், வாய்வு, புளியேப்பம் போன்றவையும் ஏற்படும். குடும்பத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்க வேண்டி சூழ்நிலை உருவாகும்.

வரவு- செலவு சரியாக இருக்கும். பணத்தை சேமித்து வைக்க முடியாது. ஆனாலும் நேர்மை, உண்மை, நம்பிக்கையுடன் வாழ்வீர்கள். நீண்ட நாள் கடன் வாங்கி வட்டி கட்டுவீர்கள். உயர்ந்த வாடகை, ஆடம்பர செலவுகளுக்கே வருமானம் போதாது. மிதமிஞ்சிய காம இச்சை கொண்டிருப்பீர்கள். வெகு எளிதில் ஒழுக்கம் தவறும் சூழ்நிலை ஏற்படும். கட்டுப்பாடு அவசியம். மற்றவர்களுக்கு அடங்கிப் போக மாட்டீர்கள். உங்கள் வாழ்க்கையில் அநேக ரகசியங்கள் புரிந்துகொள்ள முடியாமல் புதைந்து கிடக்கும். அதை யாருமே தெளிவாக அறிய முடியாது. நீங்கள் எதைச் செய்தாலும்- சரியோ தவறோ- சரியான காரணம் காட்டுவீர்கள். சிலகாலம் சர்வாதிகாரியாக விளங்குவீர்கள். நல்ல மனைவி அமைவாள். தினசரி செய்தி, நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டு. கணிதம், ஜோதிடம், சாஸ்திரம் ஆகியவற்றை அறிந்திருப்பீர்கள். பூஜை, புனஸ்காரத்தைக் கடைப்பிடிப்பீர்கள். பக்தியும் பொது அறிவும் அதிகம் கொண்டவர். பல நூல்களை வாங்க செலவு செய்யத் தயங்க மாட்டீர்கள். அடிக்கடி வெளியூர் பயணம் செய்வீர்கள். பல திட்டங்கள் போடுவதும் கற்பனை சிறகடிப்பதும் பயணத்தில் தான். அமர்ந்தபடியே உறங்குவீர்கள். முன்கோபம் கொண்டவர். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவீர்கள். திட்டமிட்டுக் காரியம் செய்தல், கடமை உணர்ச்சி, நியாயம், நேர்மை ஆகியவற்றிற்கு அதிகம் மதிப்பு தருவீர்கள். பழைய சம்பிரதாயங்களைக் கைவிட மாட்டீர்கள். அடுத்தவர்கள் துன்பம் கண்டு இரக்கத்துடன் உதவி செய்வீர்கள். ஆனால் உங்களால் உதவி பெற்றவர் உங்களுக்குத் துன்பம் செய்வது கண்டு வேதனைப்படுவீர்கள். நியாயம் வழங்குவதில் சிறந்து விளங்குவீர்கள். தெய்வபக்தி கொண்டும் பெரியோர்களிடம் மதிப்பு கொண்டும் இருப்பீர்கள்.

இதுவரை உங்களுடைய ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருந்த சனிபகவான் நீங்கள் நினைத்ததையெல்லாம் நடத்தி வைத்தார். உடல்நலனிலும் பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தீர்கள். கோர்ட், வம்பு, வழக்கு ஆகியவற்றில் உங்களுக்கு சாதகமான முடிவுகளே வந்தது. கடன் பிரச்சினைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தீர்கள். கூட்டுத் தொழிலில் லாபமும் நன்மையும் இருந்தது. குடும்பத்தில் பொன், பொருள் சேர்க்கை உண்டானது. நண்பர்களால் உதவியும் ஆதரவும் கிடைத்தது. கணவன்- மனைவி உறவு சந்தோஷமாக இருந்தது. தாய்வழி உறவால் பண உதவியும் அனுசரணையும் இருந்தது.

இனி சனி பகவான் உங்களுடைய ராசிக்கு பன்னிரண்டாம் இடத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார். அதாவது ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. இது விரயச்சனி எனப்படும். அலைச்சல் அதிகரிக்கும். அடிக்கடி இடமாற்றம் வந்துகொண்டே இருக்கும். கோர்ட், கேஸ் போன்றவற்றிற்காக அதிகப்படியான வீண் விரயங்கள் செய்ய வேண்டியிருக்கும். பிள்ளைகளுக்குப் படிப்பில் தடை உண்டாகும். எந்த காரியத்தைச் செய்யத் தொடங்கினாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்ய வேண்டும். மனதில் பல யோசனைகள் தோன்றினாலும் அதைச் செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். உடல்நலம் பாதிக்க வாய்ப்புள்ளது. ஆதலால் உடல்நலனில் பாதிப்பு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வது நல்லது. பாதங்களில் எரிச்சல், கால்வீக்கம், மூட்டுவலி போன்றவை உண்டாக வாய்ப்புள்ளது. வீடு கட்டும் பணி நடந்து கொண்டிருந்தால் அதிகப்படியான செலவுகளும், ஒரு வேலையை இருமுறை செய்யும் நிலையும் உண்டாகும். இதனால் காலவிரயமும் பணவிரயமும் உண்டாகும். நிம்மதியான உறக்கம் வராது. கெட்ட கனவுகள் தோன்றி தூக்கத்தைக் கலைத்துவிடும். குடியிருக்கும் வீடு, அலுவலகம், தொழில் ஸ்தானம் ஆகியன மாறும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் பிரச்சினைகளும் கருத்து வேறுபாடும் உண்டாக வாய்ப்புண்டு. ஆதலால் எச்சரிக்கையுடன் பேசுவது நல்லது. கணவன்- மனைவி இடையே பிரச்சினைகளும் சிக்கல்களும் உருவாகும். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் தாமதமாகும். கடன் தொல்லைக்காக அல்லது அத்தியாவசிய செலவுக்காக வீட்டில் உள்ள நகைகளை அடகு வைக்கவோ அல்லது விற்கவோ நேரிடும். இதனால் குடும்பத்தில் மனக் கசப்புகளும் உண்டாகும். அதற்காக அநியாய வட்டி வாங்கும் நபர்களிடம் கடன் வாங்க நேரிடும். அவர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது.

அரசு வகையில் தொந்தரவுகளும் தடைகளும் உண்டாகும். உடன் இருப்பவர்களே உங்களுக்குத் துரோகம் செய்வார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றமும் தண்டனைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலதிகாரிகளிடமும் உடன் பணிபுரிபவர்களிடமும் கவனமாகப் பேசுவது நல்லது. செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. சுமாராக இருக்கும். மூத்த சகோதரர்களுக்கு அவர்களுடைய பேச்சாலேயே பிரச்சினைகளும் சிரமங்களும் உண்டாகும். நிறுவனங்களில் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கும் சிரமங்களும் கஷ்டங்களும் அதிகமாகும்.

இளம் வயதினருக்குத் திருமண முயற்சிகளில் தடை உண்டாகும். மனைவிக்கு உடல்நிலை பாதிக்கும். குடும்பத்தில் குழப்பமும் சங்கடமும் உருவாகும். நண்பர்களாலும் உதவி கிடைப்பது கடினம். உங்களது உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது அவசியம். உறவினர்கள் வகையில் தேவையில்லாத மனசங்கடங்களும் பிரச்சினைகளும் உண்டாகும். கௌரவக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. எதிரிகளால் தொல்லையும் பாதிப்பும் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் வில்லங்கமும் பிரச்சினைகளும் வரும். குலதெய்வ வழிபாடுதான் உங்களுக்குக் கைகொடுக்கும். குலதெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வந்தால் தீமைகள் குறைந்து நன்மைகள் உண்டாகும்.

யாருக்கும் கடன் கொடுப்பது கூடாது. ஏனெனில் பணம் திரும்ப வருவது கடினம். பணம் வாங்கியவர்கள் உங்களை ஏமாற்றி விடுவார்கள். அரசு, வங்கி போன்றவற்றில் கடன் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். கையில் காசு இருந்தாலும் அடுத்த விநாடியே செலவாகிவிடும். புனித யாத்திரை சென்றுவர வாய்ப்பு உண்டாகும். இதனால் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும்.

சனி பகவான் மூன்றாம் பார்வையாகக் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் சண்டையும் சச்சரவும் உண்டாகும். உங்களது பேச்சாலேயே குடும்பத்தில் பிரச்சினை உருவாகும். ஆதலால் எங்கும் எப்போதும் யோசித்துப் பேசுவது சிறந்தது. குடும்ப தேவைகளுக்காகக் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். அந்தக் கடனையும் விரைவில் அடைக்க முடியாமல் சிரமப்படுவீர்கள். கண் சம்பந்தமான பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு. சிறிய குழந்தைகளின் உடல்நலனிலும் அதிக அக்கறை தேவை. இதுவரை உங்கள் பேச்சைக் கேட்டு நடந்த குடும்பத்தார் இனி அதற்கு நேர்மாறாக நடப்பார்கள். மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சனிக்கிழமைதோறும் கால பைரவரை வழிபடுவது நல்லது.

சனிபகவான் ஏழாம் பார்வையாக ஆறாமிடத்தைப் பார்ப்பதால் கடன் உண்டானாலும் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைக்க முயல்வீர்கள். நோயின் பாதிப்புகள் இருந்தாலும் அது விரைவில் தீர்ந்துவிடும். வம்பு, வழக்கு உண்டாகி நிவர்த்தி ஆகும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்குச் சுபக்கடன் வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணைக்காக மருத்துவச் செலவும் செய்ய வேண்டியிருக்கும். போட்டி, பொறாமைகளை விரட்டியடித்து வெற்றி பெறலாம்.

சனி பகவான் பத்தாம் பார்வையாக 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால் உங்களது தந்தைக்கு உடல்நலம் பாதிக்கும். அதனால் மருத்துவ விரயங்களும் உண்டாகும். தந்தையிடம் கருத்து வேறுபாடுகளும் பிரச்சினைகளும் உண்டாகும். தந்தையுடன் சேர்ந்திருந்தால் மேற்கூறிய பிரச்சினைகள் வரும். தந்தையும் மகனும் தனியாகவோ அல்லது இருவரில் யாரேனும் ஒருவர் வெளியூரிலோ வெளியிடங்களிலோ இருந்தால் பிரச்சினைகள் வராது. கௌரவக் குறைவு வராமல் சமாளிக்கலாம். பூர்வீகச் சொத்துக்கள் சில விரயமாகும். புனித ஸ்தல யாத்திரை செல்வதும் தெய்வ வழிபாடு, பூஜை அனுஷ்டானங்களும் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2009- செப்டம்பர் முதல் பத்து மாதகாலம் சனி உத்திர நட்சத்திரத்தில் சஞ்சாரம். இது சூரியனின் நட்சத்திரம். சூரியன் உங்கள் ராசிக்கு 11-க்குடையவர். எனவே இக்காலம் தனலாபம், வழக்குகளில் வெற்றி, புதிய முயற்சிகளில் அனுகூலம், தந்தை வழி ஆதரவு ஆகிய நற்பலன்களை எதிர்பார்க்கலாம். மூத்த சகோதர வகையில் சாதகமான பலனையோ அல்லது பாதகமான பலனையோ சந்திக்கக்கூடும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருப்பதை அனுசரித்து மேற்கண்ட பலன்கள் அமையும்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2010- ஜூலை முதல் 14 மாதகாலம் சனி துலா ராசிக்கு 10-க்குடைய சந்திரன் சாரத்தில் (அஸ்த நட்சத்திரத்தில்) சஞ்சரிப்பார். தொழில், வாழ்க்கை அமைப்பில் உங்கள் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். புதிய முயற்சிகள் கைகூடும். தொழில் சிர்திருத்தம் உண்டாகும். புதிய மணமக்கள் தனிக்குடித்தனம் போகலாம். கூட்டுக் குடும்பத்தில் பாகப்பிரிவினைகள் உருவாகலாம். தாயார் அல்லது தாய்வர்க்கத்தில் பீடை, பிணி போன்றவை ஏற்பட்டு குணம் உண்டாகலாம்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2011- செப்டம்பர் முதல் ஆறு மாதகாலம் சனி பகவான் துலா ராசிக்கு 2, 7-க்குடைய செவ்வாயின் சாரத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். ஒரு பகுதி சிறப்பாகவும் மறுபகுதி வெறுப்பாகவும் பலன் காணப்படும். குடும்பத்தில் சுபமங்களக் காரியங்களான திருமணம், வாரிசு யோகம், சிமந்தம், ருதுமங்கலம், வாகன யோகம் போன்ற நன்மைகளும் உண்டாகும். அது சம்பந்தமாகப் புதிய கடன்களும் உண்டாகும். தசாபுக்திகள் மோசமாக இருந்தால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். திருமணம் ஆகவேண்டியவருக்குத் திருமண யோகம் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப்பெயர்ச்சி ''ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்; வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்'' என்பது மாதிரி, ''யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்'' என்று சவால் விட்டு சாதனை புரியச் செய்யும். உங்கள் சபதம் ஜெயிக்கும்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப்பெயர்ச்சி தேக சௌக்கியம், வாழ்க்கை முன்னேற்றம், தொழில் முன்னேற்றம், உற்றார்- உறவினர் நட்பு, தாராளமான வரவு- செலவு ஆகிய யோகங்களையும் கொடுத்து சமயத்தில் தேக சௌக்கியத்தையும் குறைக்கும்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப்பெயர்ச்சி கடன்களை அதிகரிக்கச் செய்யும். மறைமுக எதிர்ப்பு, இடையூறுகளைத் தரும். போட்டி, பொறாமைகளை ஏற்படுத்தும். நம்பிக்கையும் தைரியமும் வைராக்கியமும்தான் உங்களைக் காப்பாற்றும்.

பரிகாரம்
மதுராந்தகம்- செங்கல்பட்டுக்கு இடையில், மேல்மருவத்தூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள வடதிருநள்ளாறு என்ற திருத்தலத்திற்குச் சென்று சனீஸ்வரரை வழிபடலாம். மேட்டுப்பாளையம் அருகில் உள்ளது.

கன்னி - Kanni - Sanipeyarchi palangal -2009

கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசி அன்பர்களே!
கன்னி ராசியில் பிறந்த நீங்கள் நல்ல நடத்தையும், நல்ல பழக்க - வழக்கங்களையும் கைக் கொள்வீர்கள். வசிகரத் தோற்றம் கொண்டிருப்பீர்கள். யாவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். அளந்து பேசுவீர்கள். அகம்பாவம் இராது. நீங்கள் கற்றதை மற்றவர்களிடம் கூறிப் பாராட்டு பெறுவீர்கள். மற்றவர்களைக் கவர்ந்து விடுவீர்கள். பிறர்க்கு கல்வி புகட்டுவது, ஓவியம் வரைவது, மொழி மாற்றம் செய்வது போன்றவை பிடித்தவையாக இருக்கும். அதுவே தொழிலாகவும் அமையலாம். சகோதர பாசம் உண்டு. குடும்பத்திற்கு முதல் குழந்தையாக நீங்கள் பிறக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. அதிக உழைப்பு உங்களுக்குப் பிடிக்காது. ஆனால் கடல் கடந்து போகும் சூழ்நிலை ஏற்படும். பயந்த சுபாவம் கொண்டிருப்பீர்கள். எதையும் மதி நுட்பத்தால் அதன் சூட்சுமத்தைப் புரிந்து கொள்வீர்கள். நேர்வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர். தாய்ப்பாசம் மிகக் கொண்டவர். தாயின் ஆதரவும் அன்பும் ஆசியும் உங்கள் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக இருக்கும். சுகமான வாழ்க்கையையே விரும்புவீர்கள். எவ்வளவு துன்பம் வந்தாலும், பண நெருக்கடி வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். வசதி குறையாது. பேராசை கொள்ள மாட்டீர்கள்.

சுயமான வீடு, வாகனம், நல்ல வாழ்க்கைத் துணை அமையும். குழந்தைகள் பிறந்ததும் வசதி ஏற்படும். வீடு சிறிதாக இருப்பினும் எல்லா வசதிகளும் பெற்று சுகபோகமாக வாழலாம்! எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகம் இருக்கும். எதிர்காலம் பற்றி பலவிதமான கேள்விகள் மனதில் எழும். அவற்றை மற்றவர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்வீர்கள். பள்ளியில் படிப்பதைவிட நூல் நிலையங்களில் அதிகப் படிப்பைப் பெறுவீர்கள். படித்ததைக் குறித்து வைத்துக் கொள்வீர்கள். பொது அறிவு நிரம்பப் பெற்றவராவீர்கள். புத்தகமும் கையுமாக அறிவு ஆராய்ச்சியில் கருத்தை செலுத்திக் கொண்டிருப்பீர்கள். நீண்ட ஆயுளுடன் இருப்பீர்கள். துணிச்சலான காரியங்களில் அடிக்கடி ஈடுபடுவீர்கள். தூக்கத்திலும் உங்களுக்கு விழிப்பு உண்டு. ஞாபகசக்தி அதிகம் கொண்டிருப்பீர்கள். எளிதில் யாரிடமும் ஏமாறமாட்டீர்கள். ஆனால் புகழ்ச்சிக்கு மயங்குவீர்கள். புராதன பொருள், புத்தகம் மற்றும் கலைப் பொருள் வாங்குவதில் ஆர்வம் இருக்கும். பலனை எதிர்பாராமல் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தர்ம காரியங்கள் மற்றும் புண்ணிய ஸ்தலங்கள் செல்வீர்கள். கோவில் திருப்பணிகள் செய்வீர்கள்.

உங்களுடைய ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் விரயச் சனியாக இருந்த ஸ்ரீ சனி பகவான் கடந்த காலங்களில் உங்களுக்குப் பிரச்சினைகளையும் சிறுசிறு விபத்துகளையும் கொடுத்தார். மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பால் கல்வியில் தேர்ச்சிபெற முடியாத நிலையும் உண்டானது. எதிலும் மந்தத் தன்மையும் ஏற்பட்டது. எக்காரியத்தையும் விரைவாக முடிக்க முடியாதபடி தடைகளும் குறுக்கீடுகளும் உடலில் சோர்வும் தளர்வும் உண்டானது. கணவன் - மனைவிடையே கருத்து வேறுபாடும் மனக் கசப்புகளும் சிலசமயம் ஏற்பட்டாலும் பிறகு சமாதானம் ஆகிவிடும். சிலர் விவாகரத்து பெறும் அளவிற்கு நிலைமை மோசமடையும்.

இனி சனி பகவான் உங்களுடைய ராசியில் அமர்ந்து ஜென்மச் சனியாகச் செயல்படுவார். 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு இந்தச் சுற்று இரண்டாவது சுற்று- பொங்கு சனியாகச் செயல்படும். அதிக நற்பலன் உண்டாகும். 30 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும் சிரமங்களை உண்டாக்கலாம்! திருமணத்தில் பிரச்சினைகளும் திருமணத்தடையும் உண்டாகும். கடன் தொல்லை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவியில் உள்ளவர்களுக்குப் பிரச்சினைகளும் சிக்கல்களும் உருவாகும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும். தாய்வழி சொந்தங்களால் தொல்லைகளும் இடையூறுகளும் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். நண்பர்களால் தீய பழக்க - வழக்கங்களைக் கற்றுக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். அதனால் போதை வஸ்துகளுக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்ளவும். மனதில் தன்னம்பிக்கை குறையும். உங்களுக்கு மனதில் இனம்புரியாத பயம் இருந்து கொண்டிருக்கும். குறிப்பாக உடல்நிலை பற்றிய பயமும் சந்தேகமும் உண்டாகும். அதனால் மருத்துவச் செலவு உண்டாகும். நண்பர்கள், உறவினர்களை நம்பி எக்காரியத்திலும் இறங்க வேண்டாம். அது உங்களுக்கு ஆபத்தாகவே முடியும். சகோதர - சகோதரிகள் நம்பிக்கைத் துரோகமும் செய்வார்கள். சொன்ன வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகும். நண்பர்கள்தான் காப்பாற்றுவார்கள். பணத்தட்டுப்பாடு இருக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கத் தாமதமாகும். குடும்பத்தில் புதுப் புது சிக்கல்கள் உருவாகும். எக்காரியத்தையும் கஷ்டப்பட்டுதான் செய்து முடிக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் விருப்பம் இல்லாமல் சதா ஊர் சுற்றிக் கொண்டே இருப்பார்கள். கடனை அடைக்க மிகவும் சிரமப்படுவீர்கள். இதனால் கடன் கொடுத்தவர்கள் உங்களை அவமானப்படுத்துவார்கள். மேற்படிப்பு படிக்க முயல்பவர்களுக்கு அதில் தடை உண்டாகும். விடாமுயற்சி தேவை! சில சமயம் சில காரியங்களில் சொந்தங்களும் நண்பர்களும் ஒதுங்கி நிற்பதால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள்! வம்பு, வழக்கு ஆகியவை வரும். மூத்த சகோதரர்களால் தொல்லைகளும் சங்கடங்களும் அதிகரிக்கும். செய்தொழிலில் ஏற்ற - இறக்கமான பலனே உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.

தந்தைக்குச் சிறப்பான பலனைத் தரும். தந்தைக்கு தொழிலில் லாபமும் கௌரவமும் கூடும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடன் மறையும். வாகனத்தில் கோளாறுகள் ஏற்பட்டு உங்களுக்குச் செலவுகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சலும் சோர்வும் உண்டாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. பூர்வீகச் சொத்துகளின் பிரச்சினைகளும் வில்லங்கமும் ஏற்படும். செய்யும் தொழிலில் வேலைப் பளு அதிகரிக்கும். இளைய சகோதரர்களுக்கு கௌரவமும் மரியாதையும் கூடும். சமயத்தில் உங்களது பேச்சை யாரும் கேட்டு நடக்கமாட்டார்கள். உங்களை எதிர்த்துப் பேசும் சூழ்நிலை உண்டாகும். யாருக்காகவும் பொறுப்பேற்கக்கூடாது. எக்காரியத்திலும் அவசரமில்லாமல் நிதானமாகச் செயல்படுவது உசிதம்.

இரும்பு, மின்சாரம் மிஷினரி போன்ற தொழிலில் ஈடுபாடு உண்டாகும். நேரடிக் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் மரியாதை குறையும். அவப்பெயரும் உண்டாகும். யாருடனும் சண்டையிடாமல் அனுசரித்துச் செல்வதே நல்லது. மேலதிகாரிகளிடம் கவனமாகச் பேச வேண்டும். இல்லையென்றால் வேலையிலிருந்து விலகவோ அல்லது தண்டனைக்கோ உள்ளாவீர்கள். சிலருக்கு வீடோ அல்லது அலுவலகமோ இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். குல தெய்வ வழிபாட்டில் பங்காளிகளால் நிம்மதி குறைந்து காணப்படும். தெய்வ வழிபாட்டில் முழு நம்பிக்கையோடு மனதைச் செலுத்தினால் தெய்வ அருளால் பிரச்சினைகள் யாவும் குறைய வாய்ப்புண்டு.

சனி பகவான் மூன்றாம் பார்வையாக உங்களது தைரிய, வீரிய ஸ்தானத்தைப் பார்ப்பதால், சிலநேரம் உங்களது தைரியமும் வீரியமும் குறைந்து காணப்படும். இளைய சகோதர- சகோதரிகளுக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கும். மிகவும் சோர்வுடன் காணப்படுவார்கள். அவர்களிடம் எந்த உதவியும் எதிர்பார்க்க முடியாது. தீயவர்களின் சேர்க்கை உண்டாகும்.

சனி பகவான் ஏழாம் பார்வையாக உங்களுடைய களஸ்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் இதுவரை திருமணமாகாமல் இருந்தவர்களுக்குத் திருமணம் நடக்கும். நண்பர்களால் உதவியும் இருக்கும்; தொல்லையும் இருக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல முன்னேற்றமும் லாபமும் இருக்கும். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த பிணக்குகள் தீர்ந்து சந்தோஷமாக இருப்பார்கள். மனைவியின் பேரில் தொழில் ஆரம்பிக்கலாம்! அவர்கள் வகையில் ஓரளவு உதவி கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்! புதிய வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

சனி பகவான் பத்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழிலில் மந்தத் தன்மை இருந்தாலும் கெடாது! வளர்ச்சி உண்டாகும். தொழில் அபிவிருத்திக்காக அடிக்கடி வெளியூர் சென்று வரும் சூழ்நிலை உருவாகும். வாழ்க்கையில் படிப்படியாக வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டு. தொழில் - கடன் சம்பந்தமாக சில சமயம் வாக்கைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலை உண்டாகும். ஆனாலும் தெய்வ பூஜை, வழிபாட்டால் நாணயம் காப்பாற்றப்படும். வியாபாரத்தில் சிறிது மாற்றம் ஏற்படும். ஆனால் ஒரு கதவு அடைபட்டால் இன்னொரு கதவு திறக்கும். தொழிலைக் காப்பாற்றலாம்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2009- செப்டம்பர் முதல் பத்து மாத காலம் கன்னி ராசிக்கு விரயாதிபாதியான சூரியன் சாரத்தில் உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம். இக்காலம் பெரும்பகுதி செலவினமாகவே அமையும். தொழில், குடும்பம் இதற்காகச் செலவுகள் அடுக்கடுக்காக வந்துகொண்டே இருக்கும். பிள்ளைகளின் கல்வி அல்லது சுபச் செலவு, குடும்பத்தினரின் வைத்தியச் செலவு, சிப்பந்திகளின் செலவு என்று வரிசையாக வந்தாலும் அவற்றைச் சரிக்கட்டுமளவு வரவும் அமையும்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2010- ஜூலை முதல் 14 மாதகாலம் கன்னி ராசிக்கு லாபாதிபதியான சந்திரன் சாரத்தில் அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பார். செலவுக்குப் பின் வரவு என்ற மாதிரி கடந்த பத்து மாதம் ஏற்பட்ட செலவுகளைக் கடன் வாங்கிச் சமாளித்தீர்கள். இனி 14 மாத காலம் தொழில் லாபம், வரவு, சேமிப்பு உண்டாகி அந்தக் கடன்களை அடைக்கும் யோகம் உண்டாகும். அதாவது கிணற்றில் ஊற ஊற நீரை இறைக்க வேண்டும். குறிப்பாக எந்தச் சொத்துக்களையும் பொருள்களையும் அழித்தோ விற்றோ கடனை அடைக்காமல் லாபம், வரவு வந்து கடன்களை அடைக்கலாம். அதுவே யோகம்தானே!

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2011- செப்டம்பர் முதல் ஆறு மாத காலம் சனி பகவான் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். அது செவ்வாயின் நட்சத்திரம்! கன்னி ராசிக்கு செவ்வாய் 3, 8-க்குடையவர். ஆகவே இக்காலமும் உங்களுக்கு தனவரவு, தொழில் லாபம், மனைவி, மக்கள் ஆதரவு, உதவி போன்ற எல்லா வகையிலும் கை கொடுக்கும். 7-ஆம் இடம் உபதொழில் ஸ்தானம். தொழில் விருத்தியும் சைடு பிசினஸ் வரவும் உண்டாகும். கவலையில்லை. குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகளும் சுபச் செலவுகளும் ஏற்பட்டு மகிழ்ச்சியை அனுபவிக்கலாம்.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கை, தொழில் ஆகியவற்றில் முன்னேற்றத்தையும் சேமிப்பையும் உண்டாக்கும். பழைய கடன்களை அடைத்து சுமையைக் குறைத்துவிடலாம். சிலநேரம் வைத்தியச் செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. பொருளாதார வசதியிருப்பதால் எல்லாப் பிரச்சினைகளும் எளிமையாகத் தோன்றும்.

அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி லாபத்தையும் வெற்றியையும் தரும். எங்கும் வெற்றி எதிலும் வெற்றி என்று சங்கே முழங்கு என்று பூரிப்படையலாம். ஆனாலும் மனதில் மட்டும் ஒரு நிறைவு ஏற்படாது. காரணம் புரியாத கவலை இதயத்தில் படரும்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி சிக்கல், சிரமம், தடை, தாமதங்களை ஏற்படுத்தும். சனிப் பெயர்ச்சித் தொடக்கத்தில் கடன்களையும் போட்டி, பொறாமைகளையும் எதிர்ப்பு, இடையூறுகளையும் தந்தால் பிற்பகுதியில் யோகத்தையும் நன்மைகளையும் தரும். சனிப்பெயர்ச்சி முற்பகுதியில் நன்மைகளைத் தந்துவிட்டால் பிற்பகுதியில் கஷ்டங்களைக் கொடுக்கும். அவரவர் அனுபவத்தையொட்டி அறிந்து கொள்ளலாம்.

பரிகாரம்
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி போகும் பாதையில் உள்ள சுசிந்திரத்தில் தாணுமாலயன் கோவிலில் ஆஞ்சனேயர் சந்நிதி உண்டு. அவருக்கு வடைமாலை சாற்றி வழிபடவும்.

சிம்மம் -Simmam -Sanipeyarchi palangal -2009

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசி அன்பர்களே!
சிம்ம ராசியில் பிறந்த நீங்கள் கம்பீரமாக நிமிர்ந்து நடப்பீர்கள். மற்றவர்களை அடக்கியாள ஆசைப்படுவீர்கள். உங்கள் விருப்பப்படியே மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புவீர்கள். பசி நேரத்தில் சூடாகவும், காரம் அதிகமாகவும் உள்ள உணவை விரும்பி உண்பீர்கள். மற்ற நேரங்களில் நொறுக்குத் தீனிகள் எதுவும் சாப்பிடமாட்டீர்கள். மாமிசம் உண்பது உங்களுக்கு மிகவும் பிடிக்கும். குளிர்ந்த நீரில் நீராடுதல், ஓடை, ஆறு, நீர்வீழ்ச்சிகளில் நீந்திக் குளிப்பதற்கு மிகவும் ஆசைப்படுவீர்கள். இயற்கையாக, அமைதியாக வாழ்வதற்கு விரும்புவீர்கள். அகங்காரம் கொள்வதும் தற்பெருமை பேசுவதும் சிலசமயம் உண்டு! மற்றவர்களின் அதிகாரத்திற்கும் அடக்கு முறைக்கும் பணிந்து போக மாட்டீர்கள். உண்மை, சத்தியம், நேர்மை இவற்றிற்குக் கட்டுப்பட்டு நடப்பீர்கள். பெரும் படையே திரண்டு வந்தாலும் அஞ்ச மாட்டீர்கள். அது போல வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் சந்தித்துப் போராடி வெற்றி அடைவீர்கள்.

தைரியம், துணிச்சல் கொண்டிருப்பீர்கள். தர்க்க வாதம் செய்வதில் கெட்டிக்காரராக இருப்பீர்கள். உங்கள் வார்த்தையில் கம்பீரம் இருக்கும். மற்றவர்களை எளிதில் வசிகரிப்பீர்கள்! நகைச்சுவையுடன் உரையாடுவீர்கள். கவிதைகள் கூட எழுதுவீர்கள். ஜோதிட சாஸ்திரம் அறிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு. பொதுஅறிவை பல புத்தகங்களைப் படித்தும் கேட்டும் விருத்தி செய்து கொள்வீர்கள். உயர்கல்வி யோகம் இல்லையென்றாலும் பல கலைகளையும் கொஞ்சம் அறிந்து வைத்திருப்பீர்கள். உங்களுக்கு புத்திர தோஷம் இருப்பதால், குறைந்த எண்ணிக்கையிலே குழந்தைகள் பிறக்கும். சகல லட்சணங்களும் பொருந்திய அழகிய குழந்தைகளைப் பெறுவீர்கள். மகனை புகழ்பெற வளர்ப்பீர்கள். தர்ம காரியங்கள் பல செய்வீர்கள். மெய்ஞான கருத்துகளையும் தத்துவ ஆராய்ச்சிகளையும் செய்வீர்கள். வெளியூர் பயணம், கோவில், குளங்கள் சுற்றுதல், யாத்திரை செல்லுதல் போன்றவற்றில் அதிக ஆசை கொண்டிருப்பீர்கள். தெய்வ பக்தியும் குரு சிந்தனையும் எப்போதும் மனதில் குடி கொண்டிருக்கும். சிறு வயதிலேயே தகப்பனார் ஆதரவு குறையும். உடல் நலனில் பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வீர்கள். கோர்ட், வம்பு, வழக்கு ஆகியவற்றில் உங்களுக்கு சாதகமான முடிவுகளே வரும். கடன் பிரச்சினைகள் இருந்தாலும் கூட்டுத் தொழில் லாபமும் நன்மையும் கொடுக்கும்.

இனி ஸ்ரீ சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ஆம் இடத்திற்கு வருகிறார். இது பாதச்சனி என பொருள்படும். இதனால் மிகப்பெரிய நன்மை என்று சொல்ல முடியாது. குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளும் சச்சரவுகளும் உண்டாகும் காலம். பிரச்சினைகள் பெரிய அளவில் போகாமல் பேசித் தீர்க்கக்கூடிய அளவுக்குத்தான் இருக்கும். உடல் நலம் தேறும். திடீர் திடீரென பிரச்சினைகள் தோன்றி மறையும். உங்களது பேச்சு ஒருநாள் போல் மற்றொரு நாள் இருக்காது. எப்பொழுதும் சதா ஏதோ ஒரு பிரச்சினையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களால் அவ்வப்போது உதவி கிடைத்து மனதிற்குத் தெம்பளிக்கும். எங்கும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடக் கூடாது. மற்றவர்களுடைய பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

தொழிலில் புதிய முறைகளைக் கையாண்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். யாருக்கும் எந்த பாதகமும் இல்லாமல் பேசுவீர்கள். தந்தையால் பின்வயதில் அனுகூலமும் பூர்வீகச் சொத்துகளும் கிடைக்கும். கடன் வாங்கிய இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கடனை அடைத்து விடுவீர்கள். அரசால் முதலில் பிரச்சினைகள் உண்டானாலும் பிறகு அவை நிவர்த்தியாகி நற்பலன் உண்டாகும். கெட்ட எண்ணத்துடன் உங்களுடன் பழகும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களைவிட்டு விலகிச் சென்றுவிடுவார்கள். வண்டி வாகனம் இருந்தால் அதைப் பிறருக்கு விற்றுவிட்டுப் புதிய வாகனம் அல்லது பெரிய வாகனத்தை வாங்க வாய்ப்புண்டு. இது இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனமாகக்கூட இருக்கலாம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சுமூகமான உறவு இருந்துவரும். தந்தையின் உடல்நிலை ஒருநாள் இருப்பதுபோல் மறுநாள் இருக்காது. குழந்தைகளின் உடல்நிலையை சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவியில் உயர்வும் கணிசமான உபரி வருமானமும் கிடைக்கும். உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களிடம் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். இல்லையெனில் உங்களைப் பற்றி வீண் வதந்திகளைப் பரப்ப வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். கணவன் - மனைவி இடையே தேவையில்லாத விஷயங்களால் பிரச்சினைகள் உருவாக வாய்ப்புண்டு. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்லுதல் குடும்பத்திற்கு நல்லது. தடையாகி வந்த திருமணப் பேச்சு தற்போது தடையின்றி சிறப்பாக நடக்கும். சொந்தங்களிடையே இருந்து வந்த தகராறுகள் நீங்கி சுமூகமான சூழ்நிலை உருவாகும். வம்பு, வழக்கு, பஞ்சாயத்து ஆகியவை இருந்தால் பெரியோர்களின் முன்னிலையில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். உங்களுடைய பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது நல்லது.

தாயார் நலமாக இருப்பார். தொலைவில் உள்ள தெய்வீக ஆலயங்களுக்கு யாத்திரை செல்லும் வாய்ப்பு கிட்டும். நீங்கள் எங்கு பேசினாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பேசுவது நல்லது. ஏனெனில் நீங்கள் நல்லதே சொன்னாலும் உங்களுக்கு வீண் பிரச்சினைதான் வரும். ஏழரைச்சனி முடியும் தறுவாயில் நன்மைகளையும் யோகங்களையும் சனி பகவான் கொடுத்துவிட்டுச் செல்வார் என எதிர்பார்க்கலாம்.

இரண்டாவது சுற்று ஏழரைச்சனி நடப்பவர்களுக்கு நன்மைகளை ஸ்ரீ சனி பகவான் வழங்குவார். ஸ்ரீ சனி பகவான் மூன்றாம் பார்வையாக சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடல் பலவீனம் அடையும். எந்த வேலையையும் உடனடியாகச் செய்ய முடியாமல் இழுபறியாகத்தான் இருக்கும். கல்வியில் சிறு தடை வந்தாலும் முயற்சி செய்து படித்தால் கல்வியில் மேன்மை நிலையை அடையலாம். நிலையான சொத்துக்கள், அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தந்தை வழி சொந்தக்காரர்கள் உங்களுக்கு உதவிகள் செய்வதைவிட உபத்திரவம்தான் அதிகமாகச் செய்வார்கள். தந்தை வழி பாட்டனார் சொத்துகள் பாகப்பிரிவினை உண்டாக வாய்ப்புண்டு. அதில் உங்களுக்குப் பெருத்த லாபம் உண்டாகும் என்று சொல்ல முடியாது. ஓரளவு சுமாரான பலனே இருக்கும். மூத்த சகோதரர்களால் மன வருத்தமே உண்டாகும். ஸ்ரீ சனி பகவான் ஏழாம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார். இதன்மூலம் ஆயுள் தீர்க்கம் ஏற்படும். உங்களுக்கு விபத்தோ கண்டமோ ஏற்படாது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தானே தீர்ந்து விடும். உடல்நிலையைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இனி கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. தெய்வ வழிபாடு அதிகரிக்கும். எதிர்பாராத தனப் பிராப்தி உண்டாகும். ஸ்ரீ சனி பத்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தைப் பார்க்கிறார். பணவகையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். அதை சரியான வழியில் கொண்டு சென்றால் சொத்து நிலையாக இருக்கும். குறுக்கு வழியில் அதைச் செயல்படுத்தினால் அனைத்து சொத்துக்களும் நிலைக்காது. மூத்த சகோதரர்களால் புதுப்புது பிரச்சினைகள் உருவாகும். அதனால் உங்களுடைய மன அமைதி கெடும். தொழிலில் வரும் லாபமெல்லாம் கரைந்து கொண்டே இருக்கும். எனவே சகோதர வகையில் தாமரை இலைத் தண்­ர் உறவாக இருப்பது நல்லது- பட்டும் படாமலும்!

சிம்ம ராசிக்கு ஜென்மச் சனி காலத்தில் ஏற்பட்ட- அனுபவித்த கஷ்ட நஷ்டங்களுக்கும் சோதனை வேதனைகளுக்கும் இந்தச் சனிப் பெயச்சி முதல் பாதச் சனி இரண்டரை ஆண்டு காலமும் பரிகாரம் தேடியதுபோல் நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம். அதற்கேற்ற வகையில் நீங்களும் ஒழுக்கம், தெய்வ சிந்தனை, தான தருமம், பக்தி வழிபாடு போன்ற வகையில் உங்கள் நடைமுறை வாழ்க்கை நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டால் கிரக ஆதிக்கத்தின் கெடுபலன் குறைந்துவிடும்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
சிம்ம ராசிநாதன் சூரியனின் சாரத்தில் உத்திரத்தில் 26-9-2009 முதல் பத்து மாத காலம் சனி பகவான் சஞ்சரிப்பார். சூரியனும் சனியும் இயற்கையில் பகை பெற்றவர் என்றாலும், சூரியன் ராசிநாதன் என்ற பெருமைக்கு உரியவர் என்பதால் தற்காலிக நட்புக் கிரகமாக மாறி நன்மைகளையே தரும்! செல்வாக்கு, கீர்த்தி, புகழ், திறமை, பெருமை ஆகிய நற்பலன்கள் பெருகும். எந்த ஒரு செயலையும் முன் கூட்டியே திட்டமிட்டு கச்சிதமாகச் செய்து வெற்றி காணலாம். திருஷ்டியும் பொறாமையும் குறுக்கீடுகளும் தோன்றினாலும் அவற்றை சாதுரியமாகவும் சாமர்த்தியமாகவும் ஜெயித்து முன்னேறலாம். கவியரசர் கண்ணதாசன் பாடிய மாதிரி, ''போற்றுவோர் போற்றட்டும்; புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும். ஏற்றதென எனதுள்ளம் எடுத்துரைக்குமானால் அக்கருத்தைச் சாற்றுவேன். எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்'' என்று துணிவோடு செயல்படுவீர்கள்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2010- ஜூலை முதல் 14 மாத காலம் சிம்ம ராசிக்கு 12-க்குடைய சந்திரன் சாரத்தில் அஸ்த நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிப்பார். சந்திரன் விரயாதிபதி என்பதால் இதில் பெரும்பகுதி விரயம் ஏற்படும். செலவுகள் உண்டாகும். ஜாதக தசா புக்திகள் யோகமாக இருந்தால் சுப விரயங்களாக அமையும். அது பாதகமாக இருந்தால் வீண்விரயச் செலவுகளாக ஏமாற்றம், இழப்பு போன்றதாக அமையும். அப்படி எதிர்மறைப் பலனாக இருந்தால் திங்கள் கிழமை தோறும் சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபடவும். மலையென வரும் துன்பம் பனியென விலகிப் போகும்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2011- செப்டம்பர் முதல் ஆறு மாத காலம் சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பார். அது செவ்வாயின் நட்சத்திரம். சிம்மராசிக்கு செவ்வாய் 4, 9-க்குடையவர். எனவே இக்காலம் உங்களுக்கு அனுகூலமான காலமாகவே அமையும். பூமி, வீடு, வாகனம் போன்ற யோகங்களையும் தெய்வ அனுகூலம், குருவருள், திருவருள், ஆலய தரிசனம், பெரியோர்கள், மகான்கள் சந்திப்பு போன்ற சுபப் பலன்களையும் அடைவீர்கள். குலதெய்வ வழிபாடும் தெய்வத் திருப்பணிகளில் பங்குபெறும் யோகமும் உண்டாகும். பிதுரார்ஜித சொத்து விவகாரங்களில் உங்களுக்கு அனுகூலமும் ஆதாயமும் வெற்றியும் உண்டாகும்.

மக நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயச்சி இதுவரை அனுபவித்த விரயம், ஏமாற்றம், இழப்புகளையெல்லாம் அகற்றிவிட்டு, புதுப் பொலிவையும் பூரிப்பையும் செல்வாக்கு, பெருமை, புகழ், பட்டம், பதவிகளையும் தரும்.

பூர நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி ஏமாற்றம், இழப்பு, விரயம் ஏற்படுத்தும். குடும்பத்தில் பிரிவு, பிளவைத் தரும். பொன், பொருள், காசு, பணம் போன்றவற்றில் நிறைவைத் தந்து, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிக் குறைவை ஏற்படுத்தி மன அமைதியைக் கெடுக்கும்.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி காரிய வெற்றி, அனுகூலம், ஆதரவு, நண்பர்கள் ஆதரவு போன்ற நற்பலன்களையும் தரும். நம்பிக்கை மோசடி, ஏமாற்றம், இழப்பு, வீண் விரயம் போன்ற துர்ப்பலன்களையும் தரும். நல்லது- கெட்டது, வெற்றி- தோல்வி இரண்டையும் செய்யும்.

பரிகாரம்
திருக்கடையூர் அருகில் அனந்தமங்கலம் என்ற ஊரில் திரிநேத்ர தசபுஜ ஆஞ்சனேயர் சந்நிதி இருக்கிறது. அங்கு சென்று வழிபட்டால் துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகும்

கடகம் - Kadagam- Sanipeyarchi palangal -2009

கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசி அன்பர்களே!
கடக ராசியில் பிறந்த நீங்கள் சுறுசுறுப்பு கொண்டவர். உங்களை எளிதில் யாரும் ஏமாற்ற முடியாது. விழிப்புணர்ச்சியுடன் இருப்பீர்கள். எவ்வளவு நஷ்டம், கஷ்டம் வந்தாலும் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காத பிடிவாதக்காரர். கூட்டாளி சேர்க்கையால் புதிய பழக்க- வழக்கங்களைக் கற்றுக் கொண்டு சிலகாலம் போதை வஸ்துகளுக்கு அடிமையாவீர்கள். பிறந்த இடம் விட்டு வனவாசம் மாதிரி வெளியிடத்தில் வாழ்வீர்கள். அப்படி வாழ்வதே முன்னேற்றம் தரும்! இளமைக் காலத்தில் கல்வி தடைபடும். சிறப்பாகப் பயில இயலாது; பயின்றாலும் பலன்கள் இராது. பிறகு படிப்பைத் தொடரலாம். சகோதரர்களுடன் இளமையில் ஒற்றுமையுடன் வாழ்வீர்கள். ஆனால் காலப்போக்கில் பண விவகாரத்தில் பிரிவு ஏற்பட்டு பிறகு ஒன்று சேர்வீர்கள். அன்னையின் அரவணைப்பு இளமைக் காலம் வரை தொடரும். உங்களுக்கென்று வாழ்க்கை ஏற்பட்டு தாய், தகப்பன் ஒற்றுமை குறைந்து தனிக்குடித்தனம் அமையும்போது வேறுபடும். தந்தையை விட்டுப் பிரிந்து வாழ்வீர்கள். புத்திர விருத்தி உண்டு. அவர்களிடம் சுயநலமும் அவசர புத்தியும் கொண்ட சிக்கனவாதி எனப் பெயர் வாங்குவீர்கள். நீங்கள் பெற்ற புகழ், பெயர், அந்தஸ்தை உங்கள் வாரிசுகளால் பெற முடியாது. எந்தக் குடியில் பிறந்திருந்தாலும் மக்கள் மத்தியில் நன்கு தெரிந்தவர்களாக இருப்பீர்கள். வெளியூர் பயணங்கள் செய்ய ஆர்வம் கொண்டிருப்பீர்கள். மக்களுக்குப் பொதுத் தொண்டு செய்யவும், பொதுமக்களிடையே கலந்து உறவாடவும் விரும்புவீர்கள். ஊருக்காக உழைப்பவர் நீங்கள்! உயர்ந்த கல்வி இல்லை என்றாலும், அறிவு, திறமை, ஞானம் இயற்கையாகவே பெற்றிருப்பீர்கள். உங்களுக்கு ஞாபகசக்தி அதிகம். நீங்கள் எக்காரியத்தையும் விரைவாக முடிப்பீர்கள். எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்தாலும் அதைச் சுலபப்படுத்தி சிக்கிரம் முடிப்பீர்கள். நீங்கள் எக்காரியத்தைத் தொடங்கினாலும் ஆரம்பத்தில் தோல்வி அடைந்தாலும் விடாமல் அதீத முயற்சி செய்து அக்காரியத்தை முடித்து வெற்றி அடைவீர்கள். எவ்விஷயத்தையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர். ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன் பல முறை தீர ஆலோசனை செய்து அக்காரியத்தில் இறங்குவீர்கள். அப்படி இறங்கிவிட்டால் அக்காரியத்தை முடிக்கும் வரை தூக்கம் வராது. எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் துணிந்து நின்று வெற்றி காண்பீர்கள்.

இனி சனி பகவான் உங்களது ராசிக்கு 2-ஆம் இடத்தில் இருந்து 3-ஆம் இடத்துக்கு வருவது நல்ல யோகம். நன்மைகள் கிடைக்கும்! தைரியமும் நம்பிக்கையும் கூடும். எந்தக் காரியத்தை எடுத்தாலும் அதை நிறைவேற்றும் வரை ஓயமாட்டீர்கள்! வசதி வாய்ப்பு அதிகமாகும். நண்பர்கள், உறவினர்கள் நெருங்கி வருவார்கள். இதுவரை உங்களுக்கு இருந்த அவப்பெயர் நீங்கி கௌரவமும் மரியாதையும் கூடும். புதிய தொழில் தொடங்க முனைவோர் முதலீடு இல்லாமலேயே தொழில் தொடங்க தாராளமாக வழிவகை பிறக்கும். வேலையில் மனதிற்குப் பிடித்த இடத்தில் மாற்றமும், பதவி உயர்வும் உண்டாகும். பலரும் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். கணவன் - மனைவி இடையே பிரச்சினைகள் தீர்ந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். அன்பு பெருகும். வாழ்க்கைத் துணையின் சொந்தங்களால் பல உதவிகள் கிடைக்கும். நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் ஆபரண- ஆடை சேர்க்கை உண்டாகும். இதனால் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மிக விரைவாகத் தடையின்றி நடக்கும். தன - தான்ய விருத்தியும் உண்டாகும். எங்கு சென்றாலும் மதிப்பும், மரியாதையும் கூடும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பெற்றோர்களுக்குப் பெருமை தேடித் தருவார்கள். சிலருக்கு (படிக்கும் மாணவர்களுக்கு) உடல்நலக் குறைவால் படிப்பில் நாட்டம் செலுத்த முடியாமல் கல்வியில் தடை உண்டாகவும் வாய்ப்புண்டு. தெய்வ நம்பிக்கை அதிகமாகும். போட்டி, பந்தயம் போன்றவற்றில் உங்களுக்குச் சாதகமான முடிவுகளே ஏற்படும். பிற மதத்தவரால் நன்மைகள் உண்டாகும். சுகமான தூக்கமும் திருப்தியான போஜனமும் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். வாகனப் பரிவர்த்தனையும் ஏற்படலாம். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வருவார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும்.

பதவி உயர்வை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு காலதாமதம் இல்லாமல் உடனடியாகப் பதவி உயர்வு கிடைக்கும். வம்பு, வழக்கு போன்றவை உங்களுக்குச் சாதகமாகவே இருக்கும். அதில் வெற்றியும் உண்டாகும். பெண்களால் இன்பமும் ஆதாயமும் கிடைக்கும்.

அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் நன்மையும் பதவி உயர்வும் அடைவார்கள். பெரியோர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படலாம். கமிஷன், கான்ட்ராக்ட், பங்குச் சந்தை போன்றவற்றில் நல்ல லாபம் கிடைக்கும். சகோதரர்களால் பலப்பல உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். ஸ்ரீ சனி பகவான் மூன்றாம் பார்வையாக உங்களது ராசிக்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார். இதனால் பூர்வீகச் சொத்தில் சில பிரச்சினைகளும் வில்லங்கமும் உண்டாகும்.

குழந்தை யோகமும் உண்டாகும். பிள்ளைகளால் நன்மையும் தீமையும் கலந்திருக்கும். பிறரிடம் கொடுத்து வைத்த சொத்துக்களை அவர்கள் பேரில் எழுதி வைத்துக் கொண்டு உங்களை ஏமாற்ற வாய்ப்புண்டு. ஆதலால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருப்பினும், சில நன்மைகளும் உண்டாகும் என எதிர்பார்க்கலாம். ஸ்ரீ சனி பகவான் ஏழாம் பார்வையாக ஒன்பதாமிடத்தைப் பார்ப்பதால் தந்தைக்குச் சிறப்பாக இருக்கும். தாய்-தந்தை ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருப்பார்கள். பலகாலமாகப் பிரிக்காமல் இருந்த சொத்துக்களுக்குத் தற்போது ஒரு முடிவு கிடைக்கும். நீண்ட காலமாக நிறைவேற்ற முடியாமல் இருந்த பிரார்த்தனைகள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் நிறைவேறும்! தெய்வீக ஆலயங்களுக்குப் பயணம் போகலாம். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட வெளியிடங்களுக்குச் செல்லும் நேரம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் அதனால் ஆதாயமும் இருக்கும். ஸ்ரீ சனி பகவான் 10-ஆம் பார்வையாக பன்னிரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் வீண் விரயங்கள் அதிகமிருக்கும் புதிய வீட்டிற்குக் குடி போக வாய்ப்பு உண்டு. சிலர் பழைய வீட்டை இடித்துப் புதிதாகக் கட்டிக் குடிபோக வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றமும் உண்டாகும். இரவு அதிக நேரம் கண் விழித்திருக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் பயணம் இருந்து கொண்டே இருக்கும் நிலை உள்ளது. இதனால் உடல் சோர்வும், டென்ஷனும் இருக்கும். வரவு, செலவு போன்றவற்றில் கவனமாக இருப்பது நல்லது. இல்லையெனில் உங்களுக்கு தெரியாமல் பணம் காணாமல் போகும் நிலை உருவாகி விடும்.

கடகத்துக்கு 7-க்குடைய சனி அந்த 7-ஆம் இடத்துக்கு 9-ல் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் திருமண யோகம் உண்டாகும். திருமணம் ஆனவர்களுக்கு மனைவியால் கணவருக்கும் - கணவரால் மனைவிக்கும் அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும். அவர்களை இணைத்துக் கூட்டுத் தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.

கடக ராசிக்கு 8-க்குடையவர் அதற்கு 8-ல் மறைந்தாலும், 8-க்கு 8- ஆயுள் விருத்தி உண்டாகும். 6-ஆம் இடத்துக்கு கேந்திரத்தில் சனி நிற்பதால் சத்ருக்களும் மறைமுக எதிர்ப்பு, இடையூறுகளும் உருவாக இடமுண்டு. என்றாலும் 11-ஆம் இடம் ஜெயஸ்தானமான ரிஷபத்துக்கு திரிகோணம் பெறுவதால் 6-ஆம் இடத்துத் தொல்லைகளை எதிர்த்து ஜெயித்து விடலாம். அதற்காகச் செலவுகள் உருவாகும் என்பதை ராசிக்கு 12-ஆம் இடத்தை சரி பார்க்கும் பலனாகக் கருதலாம். மேலும் அக்டோபர் மாதம் 6-ல் ராகு, 12-ல் கேது வருவதும் உங்களுக்கு அனுகூலமான திருப்பத்தை உருவாக்கும். பாபஸ்தானத்தில் பாபகிரங்கள் அமர்ந்தால் அந்த பாபத் தன்மை அழிந்துவிடும் அல்லவா? அதாவது கெட்ட இடத்தில் உள்ள கெட்ட கிரகங்கள் அந்த இடத்தைக் கெடுப்பதால் ஜாதகர்களுக்கு நன்மை உண்டாகும்!

பொதுவாக 3, 6, 11-ஆம் இடங்கள்தான் சனி பகவானுக்கு யோகமான இடங்கள். ''ஆறு பன்னொன்பான் மூன்றில் அந்தகன் நிற்க, கூறுபொன் பொருண்டாம். குறைவிலாச் செல்வம் உண்டாம். ஏறும் பல்லக் குண்டாம். இடம்பொருள் ஏவலுண்டாம். காறுபால் அஷ்டலட்சுமி கடாட்சமும் உண்டாகும்'' என்பது புலிப்பாணி பாடல். அதனால் இந்த சனிப்பெயர்ச்சியால் அதி அற்புத யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் அடையப்போகும் அதிர்ஷ்டசாலிகள் மூன்றுபேர் - கடக ராசி - விருச்சிக ராசி, மேஷ ராசியாகும். அதில் நீங்களும் ஒருவர்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
26-9-2009 முதல் பத்து மாத காலம் கடக ராசிக்கு 2-க்குடைய சூரியன் சாரத்தில் சனி சஞ்சாரம் செய்வார். இக்காலம் குரு கடகத்துக்கு 8-ல் மறைந்தாலும் சூரியன் வீட்டைப் பார்க்க போவதால் தனம் தான்யம், சம்பத்து யோகம் உண்டாகும். வாக்கு மேன்மை உண்டாகும். சொல்வாக்கு செல்வாக்குப் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஆனந்தமும் பெருகும். சுபமங்கள விசேஷ நிகழ்ச்சிகளும் நடக்கும். மாணவர்களுக்கு படிப்பு, வித்தை யோகம் பிரபலமாகும். 2-ஆம் இடம் நேத்திர ஸ்தானம் என்பதால் சிலருக்கு கண்ணாடி போடும் சூழ்நிலை ஏற்படும். பேச்சாற்றல் பெருகும். அரசியல்வாதிகளுக்கும் அரசு உத்தியோகம் புரிகிறவர்களுக்கும் இக்காலம் நற்காலம்! பொற்காலம்!

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் பலன்
2010- ஜூலை முதல் 14 மாத காலம் (2011- செப்டம்பர் வரை) சனி பகவான் உங்கள் ராசிநாதனாகிய சந்திரன் சாரத்தில் சஞ்சாரம் செய்வார். உங்கள் செயல்பாடுகளினால் பேரும் புகழும் சிரும் சிறப்பும் செல்வாக்கும் அடையலாம். தொழில், வியாபாரம், வேலை, உத்தியோகம் எல்லாவற்றிலும் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் செயல்பட்டு முன்னேறுவீர்கள். விரும்பிய இடப்பெயர்ச்சி, பதவி உயர்வு, பாராட்டுகள் பெறலாம். கூட்டுத் தொழில் லாபம் பெருகும். பொதுநலத் தொண்டும் பொது வாழ்க்கையில் ஈடுபாடும் கௌரவப் பதவிகளும் தேடிவரும். ஏழரைச் சனியில் ஏற்பட்ட நஷ்டங்களையும் இழப்புகளையும் ஈடுசெய்யும் வகையில் இக்காலம் செல்வச் சேமிப்பு உண்டாகும்.

சித்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2011- செப்டம்பர் முதல் ஆறு மாதகாலம் சனி பகவான் கடக ராசிக்கு 5, 10-க்குடைய செவ்வாயின் சாரத்தில் சஞ்சரிப்பதால் இக்காலம் உங்களுக்கு நற்காலம் பொற்காலம்தான்! மனதில் நீண்ட காலமாகத் திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிக்கலாம். பிள்ளைகளின் வாழ்வு வளம் பெறும் திட்டங்களையும் நிறைவேற்றலாம். அவர்களின் கல்வி, வேலை, திருமணம், வாரிசு யோகம் போன்ற சுபப் பலன்களும் சுமூகமாக நிறைவேறும். உங்களுடைய தொழில், வேலையிலும் முன்னேற்றமும் லாபமும் அனுகூலமும் உண்டாகும். பல வழிகளிலும் வருமானம் பெருகும். அரிய பெரிய சாதனைகளை அசாத்திய துணிச்சலோடு சாதிக்கலாம். குரு இக்காலம்- மேஷம், ரிஷபத்தில் சஞ்சரிக்கும் காலமும் உங்களுக்கு கோட்சார அனுகூலமாக அமையும்.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி திருமணம், புத்திர பாக்கியம், தொழில் யோகம், வேலைவாய்ப்பு ஆகிய பலன்களைச் செய்யும். கூடவே கடனையும் கொடுக்கும். ஆனால் அந்தக் கடன் சுபக் கடன் எனலாம்.

பூச நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப்பெயர்ச்சி ஏற்கெனவே தன யோகம், பதவி யோகம், செல்வாக்கு, அந்தஸ்து, வீடுமனை பாக்கியம், வாகன யோகம் போன்ற நன்மைகளைச் செய்திருந்ததால் இனி சிக்கலைக் கொடுக்கும். இறக்கத்தை ஏற்படுத்தும். வைத்தியச் செலவு, கண்டம் போன்ற துர்ப்பலனையும் தரலாம். கடந்த காலத்தில் ஏழரைச்சனியில் சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவித்தவர்களுக்கு இனி சாதனைகள் புரியும் யோகம் அமையும்.

ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப்பெயர்ச்சி பாடுபட்ட பலனை அனுபவிக்கும் யோகத்தைத் தரும். விட்டுப்போன- விலகிப்போன சொந்தம், சுற்றம், நண்பர்களை ஒன்றுசேர்க்கும். நீண்டகாலக் கனவுத் திட்டங்கள் நிறைவேறும். திருமணம், வாரிசு யோகம் உருவாக்கும்.

பரிகாரம்
திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி, ஈர உடைகளைக் கழற்றியெறிந்துவிட்டு புத்தாடை உடுத்தி, தர்பாரண்யேஸ்வர சுவாமியையும் சனீஸ்வரரையும் வழிபட்டு, ஊனமுற்றவர்களுக்குத் தான தருமம் வழங்க வேண்டும். ஏழரைச் சனியோ கண்டச்சனியோ ஆரம்பிக்கும்போது குச்சனூர் போகவேண்டும். சனி விலகிய பிறகு திருநள்ளாறு போக வேண்டும்.

மிதுனம் - Mithunam - Sanipeyarchi palangal 2009

மிதுனம்
(மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசி அன்பர்களே!
மிதுனராசியில் பிறந்த நீங்கள் கோபம் வரும்போதுகூட சிரித்துக் கொண்டே இருப்பீர்கள். ஆனால் மனதில் பழி உணர்ச்சியைப் பதித்துக் கொள்வீர்கள். குதர்க்கமும் கிண்டலும் கொண்ட வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவீர்கள். தந்திரமாகப் பேசும் காரியவாதி. நீங்கள் பிறரை எளிதில் நம்பமாட்டீர்கள். சந்தேகப் பேர்வழி. நயமாக - பணிவாகச் பேசியே உங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். வெளித் தோற்றத்திற்கு அப்பாவிபோல இருப்பினும் மனதில் உயர்ந்த ஹீரோ என்றும்; புத்திசாலி என்றும் நினைப்பீர்கள். மனம் ஒரு நிலையில் இல்லாததைப் போல சொன்ன சொல்லையும் காப்பாற்ற மாட்டீர்கள்! எதிலும் புதுமை தேவை என்று அடிக்கடி கூறுவீர்கள். உடம்பு என்றும் இளமையுடன் இருக்க பயிற்சி செய்வீர்கள்.

பெண்களிடம் பேசுவதற்கும் அவர்களுடைய நட்பைப் பெறுவதற்கும் முயற்சி செய்து வருவீர்கள். அவர்களை நம்பிக்கைக்கு உரியவராகச் செய்வதிலும் கெட்டிக்காரர்கள்தான். பல பெண்களின் நட்பும் அவர்களால் பல ஆதாயங்களையும் பெறுவீர்கள். நீங்கள் யாரையும் எளிதில் நம்ப மாட்டீர்கள். வெளியில் பார்ப்பதற்கு தைரியசாலி போல தோன்றினாலும் மனதுக்குள் கோழை! சிறிய விஷயமானாலும் பிறர் உதவியை நாடுவீர்கள். மற்றவரின் அபிப்பிராயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்வீர்கள். ஆனால் உங்களுடைய எண்ணத்தை யாரிடமும் கூறமாட்டீர்கள். நீங்கள் மழுப்பிப் பேசியே காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். உங்களால் கோபத்தை மட்டும் அடக்க முடியாது. எவ்விஷயத்தையும் தோண்டித் துருவி ஆராயும் மனம் கொண்டவர். ஆனால் உங்கள் மனதில் சந்தேகமும் பயமும் எப்பொழுதும் இருக்கும். 3-ல் இருந்த சனியால் மனதில் இனம்புரியாத கவலைகள், வேதனைகள் இருந்தன. உடலிலும் சோர்வு, மந்தநிலை போன்றவை ஏற்படலாம். பணப்பிரச்சினை இருந்தது. மருத்துவச் செலவு, குடும்பத்திற்காகத் தேவையில்லாத வீண் செலவுகள், அடுத்தவர்க்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டு அதனால் பல வகையாலும் விரயங்கள் - இப்படிப் பல சிரமத்திற்கு உள்ளானீர்கள். எங்கும் யாருக்கும் வாக்குறுதி அளிக்காதீர்கள். அதேபோல யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடக்கூடாது. மற்றவர்களுடைய பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது நல்லது. புதிய முறைகளைக் கையாண்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். யாருக்கும் பாதகம் இல்லாமல் பேசுவீர்கள். தந்தையால் அனுகூலமும் பூர்வீகச் சொத்துகளும் கிடைக்கும். வாங்கிய இடத்தில் கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துவிடுவீர்கள்.

இனி சனி பகவான் உங்களது ராசிக்கு 4-ஆம் இடத்திற்கு வருகிறார். இது அர்த்தாஷ்டமச் சனி எனப்படும். 4-ஆம் இடத்தில் சனி பகவான் வருவதால் உடல் நலக்குறைவு ஏற்படும். தாயாருக்கு மனச் சஞ்சலங்களும் மருத்துவச் செலவுகளும் ஏற்படும். மனதிற்குள் இனம் புரியாத பயமும், வேலையில் சிறுசிறு பிரச்சினைகளும் உண்டாக வாய்ப்பு உண்டு. வீடு, வண்டி, வாகனம் ஆகியவற்றில் பழுதுகள் ஏற்பட வாய்ப்புண்டு. வேலை தேடிக் கிடைக்காமல் அலைக்கழிக்க வைக்கும்.

மூத்த சகோதரருக்குப் பிரச்சினைகளும் சிக்கல்களும் ஏற்பட்டுத் தீரும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனதில் ஏதேனும் ஒரு கவலை குடிகொண்டிருக்கும். இதனால் மனச்சோர்வு உண்டாகி உடலிலும் தெம்பு இல்லாமல் மிகவும் மெலிந்து காணப்படுவீர்கள். உடலில் என்ன நோய் உள்ளது என்பதை அறிய முடியாமல் இருக்கும். குடும்பத்தில் அன்னியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சொன்ன வாக்கைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலை உண்டாகும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கமும் வம்பு, வழக்குகளும் உண்டாகும். வீடு கட்டும் பணி நடந்து கொண்டிருந்தால் அதில் காலதாமதம் உண்டாகும். கடன் கொடுத்த இடத்தில் பணம் சிக்கிரம் வந்து சேராது. முன்பு உதவி செய்தவர்கள் கூட தற்போது உதவி செய்யத் தயங்குவார்கள். உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் மந்த நிலையும், இடம் மாறி வேலை செய்யும் சூழ்நிலையும் உண்டாகும். மேலதிகாரிகள் உங்களை வேலையில் இருந்து விலக்கும் சூழ்நிலையும் அல்லது அவமரியாதை ஏற்படும் நிலையும் உண்டாகும். தீய பழக்க - வழக்கங்களுக்கு அடிமையாகும் சூழ்நிலை உண்டாகும்.

கணவன் - மனைவி இடையிலான உறவு சுமூகமாக இருந்துவரும். குடும்பத்தில் சிறுசிறு பூசல்களும், பிள்ளைகளால் விரயச் செலவும் உண்டாகும். நீங்கள் அமைதியாக இருந்தாலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உங்களிடம் வலிய வந்து பிரச்சினையை உருவாக்குவார்கள். ஆதலால் மற்றவர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது சிறந்தது. தெய்வ வழிபாட்டை விடாமல் தொடர்ந்து செய்து வருவது நல்லது. தாயின் உடல் நலனில் அக்கறை தேவை. குடும்பத்தில் நெருங்கிய உறவினரைப் பிரிய அல்லது இழக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நிம்மதியான உறக்கம் என்பது குறைவே!

சனி பகவான் உங்களுடைய ராசிக்கு 4-ஆம் இடத்துக்கு வந்து 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் செய்தொழிலில் சிறப்பும், நிலையான தொழில் அமையக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். தொழிலில் லாபமும்- அதே சமயம் அந்த லாபம் முழுவதும் கடனை அடைக்கவே சரியாக இருக்கும். மீதி என்று எதுவும் இருக்காது. சிலர் கடன் வாங்கி வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவார்கள். கல்வியில் சிறிது தடை உண்டாக வாய்ப்புண்டு. பிள்ளைகள் படிப்பில் கவனம் இல்லாமல் விளையாட்டு, பொழுதுபோக்கு என்று ஊர் சுற்ற வாய்ப்புண்டு. படிப்பில் மந்தத்தன்மையும் மறதியும் உண்டாகும். கவனமாக படித்தால் வெற்றி நிச்சயம். வேலையில் உள்ளவர்கள் மேலதிகாரியிடம் பகைமை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பொதுவாக சனி பகவான் பார்க்கும் இடத்தைக் கெடுப்பார் என சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி சனி பகவான் மூன்றாம் பார்வையாக ஆறாமிடத்தைப் பார்ப்பதால் வம்பு, வழக்கு, கடன், பகை, நோய் ஆகியவற்றை அழிப்பார் என்று பொருள். அதாவது கடன் ஏற்பட்டால்தானே கடன் நிவர்த்தி ஆகும். வம்பு, வழக்கு போன்றவை உண்டாகி பின் மறையும். இருக்கின்ற நோயும் தீரும்! எதிரிகள் தானே பயந்து ஒதுங்கிவிடுவார்கள். சிலருக்கு உத்தியோகத்தை விட்டு சுயமாகத் தொழில் தொடங்கும் நிலையும் உண்டாகும். தொழிலுக்காக எங்கு கடன் கேட்டாலும் தயங்காமல் தருவார்கள்.

சனி பகவான் ஏழாம் பார்வையாகப் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் தொழிலில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் பலரின் பாராட்டும் கிடைக்கும். இருப்பினும் சிலர் உங்கள்மீது பொறாமை கொண்டு உங்களைப் பற்றி மேலதிகாரிகளிடம் அல்லது முதலாளிகளிடம் தவறான தகவல்களைத் தருவார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது போல் நடக்காமல் உங்களைப் பற்றியே நம்பிகை அதிகரிக்கும். இது உங்கள்மீது பொறமை கொண்டவர்களுக்குத் தலைகுனிவை உண்டாக்கிவிடும். சனிபகவான் பத்தாம் பார்வையாக உங்களது ராசியைப் பார்ப்பதால் உங்கள் உடல்நலனில் பாதிப்பு உண்டாகலாம். எந்தச் செயலையும் உடனடியாகச் செய்து முடிக்க முடியாமல் மந்தத் தன்மையுடன் காணப்படுவீர்கள்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் பலன்
மிதுன ராசிக்கு 3-க்குடைய சூரியன் சாரத்தில் 2009- செப்டம்பர் முதல் சுமார் பத்து மாத காலம் சனி சஞ்சாரம் செய்வார். தொழில் ஸ்தானமான மிதுனத்துக்கு 6-க்குடையவர் சூரியன். அவர் சாரம் பெறுவதால் தொழில்துறையில் தொய்வு நிலையும் மந்தகதியும் ஏற்படும். போட்டி, பொறாமைகளைச் சந்திக்கக் கூடும். இருப்பிடத்திலும் சச்சரவுகள் தோன்றி அதிருப்தி அடையச் செய்யும். கடன் பெரும்பாதிப்பை உண்டாக்காது என்றாலும், மனதுக்குப் பாரமாகத் தோன்றும். வாக்கு நாணயத்தைக் காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையை உண்டாக்கும். சூரியன் வீடான சிம்மராசிக்கு 2-ல் சனி நிற்பதால் பொருளாதாரத் தட்டுப்பாடு இல்லாமல் பணவரவு - செலவு தாராளமாக அமையும். சனி நிற்கும் கன்னிராசிக்கு 5, 6-க்குடையவர் என்பதால் மனதில் வகுத்த திட்டங்கள் நிறைவேறும்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2010- ஜூலை முதல் 14 மாதங்கள் சனி பகவான் மிதுனராசிக்கு 2-க்குடைய சந்திரன் சாரத்தில் சஞ்சாரம் செய்வார். சனி நிற்கும் கன்னிராசிக்கு சந்திரன் 11-க்குடையவர். எனவே தாராளமான வரவு- செலவு இயக்கமும் பணப் புழுக்கமும் உண்டாகும். போட்டி, பொறாமைகளையும், எதிர்ப்பு, இடையூறுகளையும் ஜெயித்து வெற்றி பெறலாம். மூத்த சகோதரர், இளைய சகோதரர் வகையில் நன்மைகளும் அனுகூலங்களும் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் சொல்வாக்கு இனி செல்வாக்குப் பெறும்! சந்திரன் தாயார் கிரகம், தன் உடலைக் குறிக்கும் கிரகம். எனவே தாயார் அல்லது தன் சரீர இயக்கத்தில் சிறுசிறு சங்கடங்களைச் சந்திக்க நேரும்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்
2011- செப்டம்பர் முதல் ஆறு மாத காலம் சனி பகவான் மிதுன ராசிக்கு 6, 11-க்குடைய செவ்வாயின் சாரத்தில் சஞ்சரிப்பார். சனி 6-ஆம் பாவத்துக்கு பதினொன்றிலும், 11-ஆம் பாவத்துக்கு ஆறிலும் இருக்கிறார். அதனால் கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி, சத்ருஜெயம் ஆகிய நற்பலன்களைத் தருவார். இவை எல்லாம் முதலில் உண்டாகி பிறகு அவை எல்லாம் நிவர்த்தி ஆகும். செய்முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் உண்டாகும். தொழில் வகையில் லாபம் கிடைக்கும். பாடுபட்டதற்குப் பலன் உண்டாகும். வாழ்க்கையில் இதுவரை நீங்கள் அனுபவித்த வேதனைகளுக்கும் சோதனைகளுக்கும் விடிவுகாலம் ஏற்படப் போகிறது. வாழ்க்கையில் இதுவரை வீசிய புயல் அடங்கி புயலுக்குப்பின் அமைதியாக - தென்றல் தவழும்.

மிருகசிரிட நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி போட்டி, பொறாமைகளையும் எந்தக் காரியத்தை தொட்டாலும் தடையும் தாமதமும் உண்டாக்கினாலும், உங்கள் விடாமுயற்சியினால் படிப்படியாக முன்னேறி காரியத்தை நிறைவேற்றலாம். உற்றார்- உறவினர், சுற்றத்தாரின் திருஷ்டிகளைச் சமாளிக்க வேண்டும். எதிர்பாராத வைத்தியச் செலவுகளையும் சந்திக்க நேரும்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி ஆரம்பத்தில் வீண் கவலை, சஞ்சலம், ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும் அடுத்து மகிழ்ச்சியையும் வெற்றியையும் உண்டாக்கி சமப்படுத்திவிடும். பொருளாதாரத்தில் நெருக்கடி இருக்காது. ஆனால் ஈகோ - கௌரவப் போராட்டம் இருக்கும்.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி தெய்வ பலத்தாலும் நம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் நினைத்ததை நிறைவேறச் செய்யும். கடல் கடந்த பயண வாய்ப்பும் அதனால் நன்மையும் உண்டாகும்.

பரிகாரம்
தேனி- சின்னமனூர் அருகிலுள்ள குச்சனூர் சென்று சனி பகவானை வழிபடவும். அர்த்தாஷ்டமச் சனி தோஷம் விலகும்