Wednesday, May 20, 2009

வேதனை .... !


அவள் அலறிய சப்தத்தில் என் நாடியே நிசப்தமானது!

விண்ணை பிளந்து இரு கூராய் போட்டதொரு கதறல் ! என் நெஞ்சினில் அப்படியொரு படபடப்பு...

சப்தத்தின் நீளம் நீளுகையில் சின்னதாய் ஒரு ஒலி வீருட்டு கேட்கிறது

ஆனந்தத்தை என் கண்களுக்கு மட்டும் கூறியது போல் எனயும் அறியாமல் சிந்தியது நீர்த்துளி

உள் சென்று பார்க்க அனுமதித்த மருத்துவச்சிக்கு என் இருகரங்கள் கைகூப்பின

உள் செல்லும் முன்னே என் கண்கள் தேடியது என்னவளை தான்அருகில் சென்றமர்ந்து உச்சி முகர்ந்து முத்தமிட்டேன் என் சுற்றத்தார் அருகிலிருபதயும் மறந்து

அவளருகிலே சின்ன தொரு பூ பந்தினை போல் கை கால் முளைத்த நிலவினை போல் அழகாய் நெளிந்தது வளைந்து ....
என் இதயக் கண்களால் தொட்டு தடவி வருடி சின்னதாய் ஒரு முத்தம் நெஞ்சிலிருந்து ....

எத்துனை தாக்கம் எத்துனை சந்தோசம் சொர்கத்தின் விளிபில் நின்று கூக்குரல் இட்டது போல்

புத்தம் புதிதாய் மொட்டு திறப்பது போல் மெல்ல வாய் திறந்து மூடியது .....

அப்படியே என் முகம்,அப்படியே என் காதுகள், அப்படியே என் மூக்குகள் என பூரிப்போடு அனைவரையும் பார்க்க

என் இரு கண்கள் ஆயிரம் கோடி முறை புகைபடம் எடுத்து கொண்டு என் இதயத்தில் பதித்து வைத்தது......

எத்துனை சந்தோசம் எத்துனை உல்லாசம் உலகமே எனை நிமிர்த்து பார்ப்பது போல் ஒரு கர்வம்

ஆஹா எப்படி ஒரு ஆனந்தம் !

இறைவா உனக்கு நன்றி..

என் அண்ணை எனை ஈன்றெடுக்கும் போது என்ன வேதனை பட்டிருப்பாளோ என நான் அறிய என்னவளின் வேதனை !!