Tuesday, February 19, 2013

Valentine's Day gift for my wife


என்னவளே உன்னை என்று கண்டேனோ  
அன்றே அனேனடி பித்தன் !.. 

மை  இருட்டிலும் மௌனம் கலந்து நடக்கிறேன்   
பழகியதொரு பாதை போல் வேகமாய் வெருடென்று  

சற்றும் சலனமில்லாமல் புகுந்தவளே  
எங்கிருந்தாயடி இத்துணை நாள் ! ... 

கல்லுக்கும் மண்ணுக்கும் ஓடிய நீரை இன்று  
சிறு புல்லுக்கும்,பூவுக்கும் வாரி இறைத்தவளே ! .... 
                                                                                                       
இந்த மூடிய சிப்பிக்குள்ளும் முத்தெடுதவளே   
என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் சொன்னவளே  !                                                          

கடலில் கலைந்த கரைந்த தொரு பெட்டிக்கு  
புது சாவி இட்டவளே ! என் இனியவளே !!

இறைவா !
கோடி முறை நன்றி கூறி  
உன் புகழை குறைக்க விரும்ப வில்லை .. 
     என்னவளை தந்தமைக்கு . 

வரிந்து கேட்கிறேன் உன்னிடம் ஒன்று  
குனிந்து, கோலுன்றி, நரைதிரை கொண்டு,  
கிழப்பருவம் எத்தி நடக்கையிலும் பிடித்திருக்க வேண்டும்  

என்னவளின் கை ...  

--------க.ஜெயவேல்-----------