அன்றே அனேனடி பித்தன் !..
மை இருட்டிலும் மௌனம் கலந்து நடக்கிறேன்
பழகியதொரு பாதை போல் வேகமாய் வெருடென்று
சற்றும் சலனமில்லாமல் புகுந்தவளே
எங்கிருந்தாயடி இத்துணை நாள் ! ...
கல்லுக்கும் மண்ணுக்கும் ஓடிய நீரை இன்று
சிறு புல்லுக்கும்,பூவுக்கும் வாரி இறைத்தவளே ! ....
இந்த மூடிய சிப்பிக்குள்ளும் முத்தெடுதவளே
என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் சொன்னவளே !
கடலில் கலைந்த கரைந்த தொரு பெட்டிக்கு
புது சாவி இட்டவளே ! என் இனியவளே !!
இறைவா !
கோடி முறை நன்றி கூறி
உன் புகழை குறைக்க விரும்ப வில்லை ..
என்னவளை தந்தமைக்கு .
வரிந்து கேட்கிறேன் உன்னிடம் ஒன்று
கிழப்பருவம் எத்தி நடக்கையிலும் பிடித்திருக்க வேண்டும்
என்னவளின் கை ...
--------க.ஜெயவேல்-----------